கணவனே கண் கண்ட தெய்வம்ல..! அதான் இப்படி!

Published:

woman worshiping her husband
woman worshiping her husband

கணவருக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் மனைவி.

பெண்ணுக்கு கணவனே கண் கண்டதெய்வம் என்று சொல்வது வழக்கம். புராணப் பெண்கள் கணவனை தெய்வமாக வழிபட்டார்கள். அங்கு பூஜை என்றால் உண்மையாக பூஜை செய்ய மாட்டார்கள். மதிப்பார்கள் என்று பொருள்.

ஆனால் ஒரு பெண்மணி உண்மையாகவே பூஜை செய்கிறார். தன் கணவருக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார்.

ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதியும் அங்கிரெட்டியும் தம்பதிகள். அவர்களுக்கு சிவசங்கர் ரெட்டி என்ற மகன் உள்ளார்.

woman worshiping her husband1
woman worshiping her husband1

4 ஆண்டுகள் முன்பு சாலை விபத்தில் அங்கிரெட்டி இறந்து போனார். அதன்பின் சில நாட்களுக்கு அங்கிரெட்டி பத்மாவதியின் கனவில் தோன்றி தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறினாராம். அதனால் பத்மாவதி கோயில் கட்டி அதில் தன் கணவரின் விக்ரகத்தை ஏற்பாடு செய்து தினமும் பூஜை செய்து வருகிறார். சிறப்பு பூஜைகளும் நடத்துகிறார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

அங்கிரெட்டியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.

பத்மாவதியின் தாய் கூட தன் கணவருக்கு இதேபோல்தான் பூஜை செய்தாராம். அதனால் பத்மாவதியும் அதேபோல் செய்யத் தொடங்கியுள்ளார். அவருக்கு அவருடைய மகன் சிவசங்கர் ரெட்டி உதவி வருகிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img