December 5, 2025, 3:01 PM
27.9 C
Chennai

மகிழ்ச்சியாக பார்ட்டி கொண்டாடினார்கள்! ஆனால் அதற்குள் எதிர்பாராத அதிர்ச்சி!

Shocking video of the moments a balcony collapses in Malibu injuring several people
Shocking video of the moments a balcony collapses in Malibu injuring several people

விபத்துகள் எப்போது எவ்வாறு எங்கிருந்து வந்தது சேரும் என்று யாராலும் கூற முடியாது. சிலர் இதனை துரதிர்ஷ்டம் என்பர்.. சிலர் விதி என்பர்.. உண்மைதான். சில சம்பவங்களைப் பார்த்தால் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த வீடியோவே ஒரு உதாரணம்.

சந்தோஷமாக பார்ட்டி கொண்டாடி உற்சாகத்தோடு நாளை கழித்துக் கொண்டிருந்த போது அவர்கள் நின்றிருந்த பால்கனி ஒரேடியாக இடிந்து விழுந்தது. அதனால் பலருக்கும் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன. தற்போது இந்த பயங்கரமான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் ரெக்கார்ட் ஆன இந்த காட்சியை சமூகவலைதளத்தில் பார்த்த நெட்டிசன்கள் வியந்து போகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் புகழ்பெற்ற மாலிபூ பீச் அருகில் ஒரு வீட்டில் சனிக்கிழமை அன்று சிலர் பார்ட்டி நடத்தினார்கள். அனைவரும் உற்சாகமாக பார்ட்டியை ரசித்தார்கள். பால்கனியில் நின்று கொண்டு கடலின் அழகை கண்டு களித்தார்கள்.

அதற்குள் இருந்தாற்போலிருந்து அவர்கள் நின்றிருந்த பால்கனி இடிந்து விழுந்தது. நான்கு பேருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டன. இருவரின் நிலை அபாயகரமாக உள்ளது. ஐந்து பேர் சிறு காயங்களுடன் தப்பினார்கள். ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் இறக்கவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு 15 பேருக்கு மேலாக நின்றிருப்பார்கள் என்று தெரிகிறது. நேராக பார்த்த சாட்சிகள் மூலம் பார்ட்டி நடத்தியபோது பால்கனி கிராக் அடித்தது என்றும் உடனே 15 அடி வரை கீழே இடிந்துவிழுந்தது என்றும் கூறப்படுகிறது.

“நாங்கள் பால்கனி பிளவுபட்ட சத்தத்தைக் கேட்டோம். என் நண்பர்கள் பதினைந்து அடிகள் கீழே விழுந்ததை எங்கள் கண்களால் பார்த்தோம். பால்கனி திடீரென்று கீழே விழுந்தது. இது மிகவும் பயங்கரமாக இருந்தது. நினைத்தாலே பயம் ஏற்படுகிறது” என்று நேரடியாக பார்த்த சாட்சிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இது மிகவும் கொடுமையானது என்றும் எவ்வாறு நடந்ததோ தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

அந்த வீட்டை வீகெண்ட் வார இறுதி விடுமுறைக்காக ஒரு பெண் வாடகைக்கு எடுத்திருந்தார். 6 பேர் மாத்திரமே நிற்கக்கூடிய அந்த பால்கனியில் பார்ட்டி நடந்த போது 30 பேருக்கு மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. பார்ட்டி நடத்த வேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் முன்பாகவே எச்சரித்தாலும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. அதிக விருந்தினர்கள் அங்கு வரக்கூடாது என்று வீட்டு உரிமையாளர் பலமுறை போன் செய்து எச்சரித்துள்ளார். குடியிருப்பவர்கள் கேட்கவில்லை. பின்னர் 15 நிமிடங்களுக்குள் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. அளவுக்கதிகமன மனிதர்கள் பால்கனிக்கு வந்து நின்றதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.

தீயணைப்பு படையினர் தற்போது அந்த வீட்டை குடியிருப்புக்கு லாயக்கற்றது என்பதாக அறிவித்துள்ளார்கள்.
இதோ இந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories