கள்ள மௌனம் ஏன்?! ஊடகங்களைக் கண்டித்து போராட்டம்: அர்ஜுன் சம்பத்!

Published:

viluppuram dinesh horz
viluppuram dinesh horz

திமுக சார்பு ஊடகங்களுக்கு கண்டனம்! விலைபோன ஊடகங்கள்! மக்கள் மத்தியில் அவதூறு பரப்பும் ஊடகங்கள்! போலி செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள்! நடுநிலை எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் ஊடகங்கள்! இந்த ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்து விட வேண்டும்… என்று குறிப்பிட்டு, திமுக., கொடியைக் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் தினேஷ் குறித்த விவகாரத்தை மூடி மறைக்கும் ஊடகங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

இது குறித்து அவர் வெளியிட்ட் அறிக்கை…

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்பவரின் மகன் ஏகாம்பரம் பச்சிளம் பாலகன் (13 வயது) திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பணியில் பொதுக் கூட்டத்திற்கான கொடியை கட்டும்போது, மின்சாரம் தாக்கி இறந்தார் என்ற செய்தி பதைபதைக்க வைக்கிறது..

எந்த ஒரு செய்தி சானலிலும் ஒரு விவாதமும் வைக்காதது மட்டுமல்ல செய்திகளையும் மூடி மறைக்கிறார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுகவினர் வைத்த பேனரின் காரணமாக ஒரு பெண்மணி உயிரிழந்தார் அப்பொழுது அனைத்து ஊடகங்களும் விவாதம் செய்தன.

இனி மேற்கொண்டு திமுக எங்கும் பேனர் வைக்காது, பொது மக்களுக்கு இடையூறு செய்யாது, என்று திமுக தலைமை அறிவித்தது. மு க ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இப்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கப் போகும் நிகழ்ச்சிக்கு கொடி கட்டும் பொழுது மின்சாரம் தாக்கி இழந்துள்ள இந்த செய்திக்கு எந்த வருத்தத்தையும் திமுக தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசுகின்ற திமுக பதிமூன்று வயது பாலகனை கொடி கட்ட வைத்திருக்கிறது. இது சம்பந்தமாக உரிய சட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு காரணமா னவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பாலகனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும்.

ஆனால் திமுக ஊடகங்கள் வெகு நேர்த்தியாக திட்டமிட்டு இந்த செய்தியை மறைக்கின்றார்கள். கொஞ்சம் கூட சமூக பொறுப்புணர்வு இல்லாமல் திமுக ஆதரவு ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

சன் டிவி,கலைஞர் டிவி,நியூஸ் 18 புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடியாக இது விஷயத்தில் அமைச்சர் பொன்முடி காப்பாற்றவும் திமுகவை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட பாலகனின் உயிருக்கு நீதி கிடைக்காமலும் இருக்க மௌனம் காக்கிறார்கள்.

அரசாங்கம் கூட ஏன் திமுக கூட இது விஷயத்தில் செயல்படலாம் ஆனால் இந்த திமுக ஆதரவு ஊடகங்கள் முழுமையாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் குறித்து மக்கள் விழிப்பு ணர்வோடு இருக்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் இந்த ஊடகங்களை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Related articles

Recent articles

spot_img