சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி தெரிவித்த WHO இயக்குநர்!

Published:

who Tedros Adhanom Ghebreyesus - 2026

கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட டெட்ரோஸ் அதானோம் “அக்டோபரில் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி.

கோவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முடிவால் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40 சதவிகித தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு ஒரு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாட்டில் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததால் மார்ச் மாதத்தில் மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், அடுத்த மாதம் முதல் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..

கடந்த திங்களன்று, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட் -19க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டின் படி உபரி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, டிஆர் காங்கோ, நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஏற்கனவே தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img