ஐபிஎல்: தில்லி, ராஜஸ்தான் பெற்ற வெற்றிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – வெள்ளிக்கிழமை – 02.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை அணியை மட்டையாடச் சொன்னது. மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (33) சொல்லிக்கொள்ளும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

அணியின் மிக முக்கிய வீரர்களான ரோஹித் ஷர்மா (7), டி காக் (19), திவாரி (15), பொலார்ட் (6), ஹர்திக் பாண்ட்யா (17), க்ருணால் பாண்ட்யா (13) என எல்லா பேர்வாய்ந்த வீரர்களெல்லாம் சரியாக ஆடவில்லை. எனவே மும்பை இருபது ஓவர்களுக்கு எட்டு விக்கட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. டெல்லி அணியில் அக்சர் படேலும் அவேஷ் கானும் தலா மூன்று விக்கட் எடுத்தனர்.

அதன் பிறகு மட்டையாட வந்த டெல்லி அணியும் மோசமாக ஆடியது. முதல் மூன்று மட்டையாளர்கள் ஒற்றை இலக்க ரன்களூடன் ஆட்டமிழந்தனர். பின்னர் ஆடவந்த ரிஷப் பந்த் (26), ஷ்ரேயாஸ் ஐயர் (33), ஹெட்மையர் (15), அஸ்வின் (20) நன்றாக விளையாடினர். டெல்லி அணி 19.1 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ipl2021
ipl2021

சென்னை சூபர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

இது ஒரு அதிக ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு ஆட்டம். பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி சென்னை அணியை மட்டையாடச் சொன்னது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி பந்தில் ஒரு ஆறு அடித்து 101 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு உதவியாக பிளேசிஸ் (25), மொயீன் அலி (21), ஜதேஜா (32) ஆகியோர் ஆடினர். இருபது ஓவர் குடிவில் சென்னை அணி 189 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சீரான வேகத்தில் ரன் எடுத்தனர். அவர்களது சரசரி ரன் ரேட் 8 ரன்னுக்கு குறையவேயில்லை. இறுதியில் ஒரு கடைசி பால் சிக்சர் மூலமாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 190 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றிகளின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் (நெட் ரன் ரேட் குறைவு), ராஜஸ்தான் அணி ஆறாம் இடத்திலும், மும்பை அணி ஏழாம் இடத்திலும் உள்ளன.

கொல்கொத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய நான்கு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. நான்கு அணிகளுக்கும் தலா இரண்டு மேட்சுகள் மீதமுள்ளன. எனவே இந்த நான்கு அணிகளுள் எந்த அணி நாலாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இனி வரும் ஆட்டங்களில் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories