சாமி சிலையை அவமதித்த கிறிஸ்துவ இளைஞர்கள்!

rowdy pasanga
rowdy pasanga

சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் கோவிலில் போதையில் சுவாமி சிலையை அவமதித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலை இளைஞர்கள் அவமதித்ததால் வெகுண்ட இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்துக்கிடையே மலை உச்சியில் கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பிற பெருமாள் கோவில்களைப் போல் இங்கும் வருடாவருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

அதே போன்று இந்த வருடம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கடம்பூா், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இருந்து பலரும் பெருமாளை வழிபடச் சென்றுள்ளனர்.

அவர்கள் வழிபாடு செய்து விட்டு வந்த பின்னர் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து வேல், சூலம் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, கோவிலில் மது போதையில் சுவாமி சிலைகளை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோந்த பொது மக்களும் ஹிந்து அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போதையில் ஆடிய இளைஞர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரைக் கைது செய்வதில் காவல் துறை மெத்தனம் காட்டி வந்தது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வீடியோவிலும் இளைஞர் ஒருவர் சிலுவை அணிந்திருப்பதைக் காண முடிந்தது.

காவல் துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட், ராகுல் மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories