February 23, 2026, 3:34 AM
25.9 C
Chennai

சாமி சிலையை அவமதித்த கிறிஸ்துவ இளைஞர்கள்!

rowdy pasanga
rowdy pasanga

சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் கோவிலில் போதையில் சுவாமி சிலையை அவமதித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலை இளைஞர்கள் அவமதித்ததால் வெகுண்ட இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்துக்கிடையே மலை உச்சியில் கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பிற பெருமாள் கோவில்களைப் போல் இங்கும் வருடாவருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

அதே போன்று இந்த வருடம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கடம்பூா், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இருந்து பலரும் பெருமாளை வழிபடச் சென்றுள்ளனர்.

அவர்கள் வழிபாடு செய்து விட்டு வந்த பின்னர் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து வேல், சூலம் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, கோவிலில் மது போதையில் சுவாமி சிலைகளை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோந்த பொது மக்களும் ஹிந்து அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போதையில் ஆடிய இளைஞர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரைக் கைது செய்வதில் காவல் துறை மெத்தனம் காட்டி வந்தது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வீடியோவிலும் இளைஞர் ஒருவர் சிலுவை அணிந்திருப்பதைக் காண முடிந்தது.

காவல் துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட், ராகுல் மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories