பெற்றோர்களே கவனம்: கோலிக்குண்டை முழுங்கிய 7 வயது சிறுவன்!

kolikundu 1
kolikundu 1

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சிலம்பரசன் இவரது 7 வயது மகன் அஸ்வின் அரசு பள்ளியில் பயின்று வருகின்றார்.

அஸ்வின் நேற்று முன்தினம் தெருவில் நண்பர்களுடன் கோலி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கோலியினை வாயில் போட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக வாயில் போட்டு வைத்து இருந்த கோலி குண்டு அஸ்வினின் தொண்டைக்குள் சிக்கி உள்ளது.

kolikundu 2
kolikundu 2

வழுவழுப்பான உருண்டையான இந்த கோலி குண்டு, தொண்டையின் இறுதியிலும் மற்றும் உணவுக்குழாயின் தொடக்க பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் சிறுவன் துடிதுடித்துள்ளார்.

அதனை கண்ட அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், ஆபத்தான பகுதியில் கோலி குண்டு சிக்கி உள்ளதால், அதனை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

kolikundu
kolikundu

அங்குள்ள அரசு மருத்துவர்கள் எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில் சிறுவன் அஸ்வினின் தொண்டையில் சிக்கி இருந்த கோலி குண்டு இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு துறைத்தலைவர் இளஞ்செழியன் தலைமையில், மருத்துவர்கள் சிந்துமதி, கமலக்கண்ணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் செந்தில்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், சிறுவன் உணவு குழாயில் சிக்கிய கோலியினை எடுக்க முயற்சி செய்தனர்.

சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பிறகு அறுவை சிகிகிச்சை இன்றி என்டோஸ்கோபி முறையில் தொண்டையில் சிக்கியிருந்த கோலி குண்டினை வெற்றி கரமாக அகற்றினர்.

kolikundu 4
kolikundu 4

மேலும், அதே நாளில் செங்கம் அடுத்த மேல் புழுதியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முபாரக்பாஷா என்பவரின் 5 வயது மகன் முத்தார்கான் காதில் போட்டுக் கொண்ட விளையாட்டு பொம்மைகளில் பயன்படுத்தும் சிறிய பேட்டரியை, மருத்துவர்கள் குழுவினர் நீண்ட முயற்சிக்கு பின்னர் அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக அகற்றி இருந்தனர்.

இது குறித்து மருத்துவர் இளஞ்செழியன் கூறுகையில்: கோலி குண்டு வழுவழுப்பான தன்மையுடையது. அதனை அகற்றும்போது மெது மெதுவாக உணவு குழாயில் நழுவிச்சென்றது.

மேலும் எங்களுக்கு மிகவும் சவாலான செயலாகவும் இருந்தது. அடுத்தகட்டமாக நாங்கள் அதிநவீன மருத்துவமுறைகளை கையாண்டு அறுவை சிகிச்சையின்றி கோலி குண்டை அகற்றினோம்.

அதேபோன்று , சிறுவனின் காதில் சிக்கிய பேட்டரி மிகவும் ஆபத்தானது. ஆனால் இவர்கள் ஒரு நாள் கழித்து தாமதமாக அழைத்து வந்தனர்.

அப்படி இருந்தும் நாங்கள் அதனை அறுவை சிகிச்சை இன்றி அகற்றினோம். இவர்கள் இன்னும் தாமதத்திருந்தால், பேட்டரியில் இருந்து அமிலம் கசிந்து இருந்து இருக்கும் மேலும் சிறுவன் கேட்கும் திறனை காது இழந்திருக்கும். குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

சிறுவர்களுக்கு எதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. அதுமட்டுமின்றி ஈசியாக முழுங்ககூடிய சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க வேண்டாம் என மருத்துவர் அறிவுரை கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories