ஆஃபருடன் வாட்ஸ் அப் பேமெண்ட்.. 5 பேருக்கு 1 ரூ அனுப்பினால் ரூ‌‌.51

whatsapp-1
whatsapp-1

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைப் பயன்படுத்தி பணம் அனுப்பினால் 51 ரூபாய் வரை காஷ்பேக் வழங்கும் திட்டத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பேமெண்ட் செயலிகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை பரிவர்த்தனைகளுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனைகள் செய்த காலம் மலையேறிவிட்டது எனலாம். ஏனென்றால், பேமெண்ட் செயலிகள் மூலம், ஸ்மார்ட்போன்களை உள்ளங்கையில் வைத்து நொடிப்பொழுதில் வங்கிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.

குறிப்பாக, நாள்தோறும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தொழிலதிபர்கள், வணிகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பேமெண்ட் செயலிகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.

கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கின்றனர். கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி போன்பே செயலியை மட்டும் சுமார் 45 லட்சத்துக்கும் மேலான வணிகர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகைய மிகப்பெரிய மார்க்கெட் பேமெண்ட் செயலிகளுக்கு இந்தியாவில் இருப்பதைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமும், இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைத் தொடங்கியது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

ஆனால், மற்ற செயலிகளைப் போல் பெரிய ஆதரவு வாட்ஸ்அப் பேமெண்ட்ஸூக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், போன்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக், ரிவாட்ஸ், கிஃஃட் கூப்பன் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்குகின்றனர்.

மேலும், இந்த செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, தங்களது செயலியில் இருந்து பிறருக்கு பணம் அனுப்பினால் கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களையும் அள்ளிக் கொடுத்தனர். இந்த ஆஃபர்கள், சலுகைகளை வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று, குறுகிய காலத்திலேயே வளர்ச்சிப்பாதையில் ஜெட் வேகத்தில் பயணத்தன.

இதேபாணியை இப்போது வாட்ஸ்அப் பேமெண்ட்ஸூம் கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப் பேமெண்ட்ஸில் இருந்து பிறருக்கு பணம் அனுப்பினால் ரூ.51 வரை காஷ்பேக் கிடைக்கும்.

இதில் இருக்கும் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் 5 பேருக்கு பணம் அனுப்பினால் மட்டுமே உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும். சலுகை என பார்க்கும்போது, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.

எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பி, கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, 5 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் அனுப்பிக்கூட கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம். இந்த கேஷ்பேக் ஆஃபர் “Give cash, get Rs 51 back” என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அதாவது பணத்தை கொடு கேஷ்பேக்கை பெறு என்ற தீமில் வாட்ஸ்அப் விளம்பரம் செய்து வருகிறது. ஆன்டிராய்டு பீட்டா வெர்சன் வாட்ஸ்அப் யூசர்களுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.

பேமெண்ட் செயலியை விரிவுப்படுத்த வாட்ஸ்அப் கையில் எடுத்துள்ள இந்த யுக்தி, யூசர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories