April 19, 2025, 4:57 AM
29.2 C
Chennai

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலம்! ஏன் தெரியுமா?

pasava
pasava

கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வாழும் காலத்தில் அந்த நபர் ஒரு ரூபாய்க்கு மேல் யாரிடமும் யாசகம் பெற்றதே இல்லையாம். அவருக்கு பிச்சையிடுவதால் தங்களுக்கு நல்லது நடக்கும் என அந்த ஊர்க்காரர்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

எல்லோரிடமும் நேசமாக நடந்து கொள்ளும் அந்த பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடகா மாநில பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவா என்ற ஹச்சா பாஸ்யா (45). இவருக்கு மனநல பாதிப்பு உண்டு. நீண்ட காலமாகவே அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துவந்த அவர் வருவோர், போவோரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

அவர் யாரிடமும் அதிகமாக யாசகம் பெற மாட்டார். ஒரு ரூபாய்க்கு மேல் யார் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டார். எல்லோரையும் அப்பாஜி என அன்பாக அழைப்பார். அந்தப் பகுதி மக்கள் அவருக்கு யாசகம் போடுவதை விருப்பத்துடன் செய்து வந்தனர்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்த்!

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்து ஒன்றில் சிக்கி பசாவா உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது இறுதிச் சடங்கை அந்தப் பகுதி மக்களே ஏற்று நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். பசவா என்ற பசவைய்யா அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல சில அரசியல்வாதிகளுக்கு பரிச்சியப்பட்டிருக்கிறார்.

முன்னாள் துணை முதல்வர் எம்.பி.பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோரிடமும் சகஜமாகப் பேசக் கூடியவர். அமைச்சர் என்றால் என்ன என்ற தொணியில் ரொம்பவே சகஜமாக அதே வேளையில் அப்பாவித்தனத்துடன் பேசுவார்.

அவர்களுமே, பசவாவுக்கு பிச்சையிடுவது தங்களுக்கு நல் வாய்ப்புகளை, ஆசிகளைக் கொண்டு வரும் என நம்பியதாகக் கூறப்படுகிறது.

பசவாவின் அவரது மறைவை ஊடகங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிச்சை எடுத்துதான் பசவா வாழ்ந்தார். ஆனால், மரணம் அவரை ஹீரோவாக்கிவிட்டது. நல்ல செயல்களுக்கு ஒலிப்பெருக்கி தேவையில்லை. நல் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஒரு பதிவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

இன்னொருவர், பசவாவின் இறுதிச் சடங்கை மக்களே ஏற்று நடத்தியதன் மூலம் மனிதம் இன்னும் இருக்கிறதை என்பதை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொருவர், பசவாவுக்கு மரியாதை செய்தோருக்கு தலைவணங்குகிறேன். அன்பிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நமது மனிதநேயம் தான் நமது அடையாளம் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பிச்சைக்காரர்களை ஒட்டி நாம் பல செய்திகளைப் படித்திருப்போம். பிச்சைக்காரர் படுக்கையின் கீழ் இருந்த ஆயிரக்கணக்கான பணம். பிச்சை பெற்ற காசில் கொரோனா நிதி கொடுத்த முதியவர் என்றெல்லாம் படித்திருப்போம். ஆனால், ஒரு பிச்சைக்காரரின் மறைவுக்கு ஊரே துக்கம் கடைப்பிடித்து, இறுதிச் சடங்கை செய்ததைக் கேட்டிருக்க மாட்டோம்,

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories