April 21, 2025, 5:30 PM
34.3 C
Chennai

அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

elephant
elephant

காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம்.

ஆனால் அவர்கள் அங்கு விலங்குகளோடு விலங்காக தங்கி அதற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில் சென்று வருவார்கள். ஆனால் சில சுற்றுலா பயணிகள் ஜீப்பில் வாகனங்களை தொடர்ந்து செல்வது, உணவு தருவது, அவற்றிடம் ஒலி எழுப்புவது போன்ற வேலைகள் செய்வது நம் ஊர்களில் வழக்கம்.

அப்போது கோபப்பட்டு சில விலங்குகள் எதிர்வினை ஆற்றும் பல வீடியோக்களை கண்டுள்ளோம். அது போன்று ஒரு யானையை பின்தொடர்ந்து சென்ற ஜீப்பை துரத்திய யானை வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

கலாம் விருது வாங்கிய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் யானை ஒன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று பேசாமல் நடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதனை மெதுவாக ஜீப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.

திடீரென கோபமடைந்த யானை வேகமாக திரும்பியது. திரும்பியதும் அலறிய சுற்றுலா பயணிகள் ஜீப்பை பின்புறமாக வேகமாக ஒட்டி கொண்டு வருகின்றனர். யானை விடாமல் துரத்திக்கொண்டு வேகமாக ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.

ALSO READ:  IPL 2025: பட்லர் அடிச்ச அடி... பராக்கு பாத்த டெல்லி அணி!

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எப்படியோ வாகனத்தை வேகமாக திருப்பி ஒட்டிக்கொண்டு வந்து தப்பிவிட்டனர். யானை பாவம் என விட்டுவிட்டு சென்றது. நொடி பொழுதில் உயிர் போகும் சம்பவத்தை தவிர்த்து பயணிகள் தப்பித்தனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த சுதா ராமன் எழுதியிருப்பதாவது, “ஒவ்வொரு உயிர்களின் தனிப்பட்ட இடத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், சாகசங்கள் செய்வதற்கு காடுகள் இடம் கிடையாது, இடமும் விடியோ எடுத்தவர்கள் பற்றிய தகவலும் இல்லை” என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் விலங்குகளும் இந்த உலகில் வாழ்கின்றன, அவற்றின் நல்வாழ்வை நம் சுயநலத்திற்காக ஏற்கனவே பட்டாசு, புகை, காற்றுமாசு, தண்ணீர் மாசு போன்றவற்றால் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். நேரடியாகவும் சென்று அவர்களது இருப்பிடத்தை கெடுப்பது தவறு என்று பலர் கமெண்டில் கூறி வருகின்றனர்.

காடுகளை விலங்குகளின் நன்மைக்காகவே அரசும் வனதுறையும் பாதுகாத்து வருகின்றன. அவற்றை கெடுக்காமல் இருப்பது தான் நாட்டு மக்களாகிய நமது கடமை என்று ஒரு பயனர் கமென்டில் தெரிவித்திருந்தார்.

Let’s learn to respect the personal space of every other individual.

Forests are not the places for any adventure #ResponsibleTourism

(Location and credits not known) pic.twitter.com/4Gcfy9DDzr— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) November 18, 2021

ALSO READ:  IPL 2025: அதிக ரன்; ஃபீல்டிங்கிலும் சேஸிங்கிலும் கோட்டை விட்ட அணிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories