அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

elephant
elephant

காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம்.

ஆனால் அவர்கள் அங்கு விலங்குகளோடு விலங்காக தங்கி அதற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில் சென்று வருவார்கள். ஆனால் சில சுற்றுலா பயணிகள் ஜீப்பில் வாகனங்களை தொடர்ந்து செல்வது, உணவு தருவது, அவற்றிடம் ஒலி எழுப்புவது போன்ற வேலைகள் செய்வது நம் ஊர்களில் வழக்கம்.

அப்போது கோபப்பட்டு சில விலங்குகள் எதிர்வினை ஆற்றும் பல வீடியோக்களை கண்டுள்ளோம். அது போன்று ஒரு யானையை பின்தொடர்ந்து சென்ற ஜீப்பை துரத்திய யானை வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

கலாம் விருது வாங்கிய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் யானை ஒன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று பேசாமல் நடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதனை மெதுவாக ஜீப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.

திடீரென கோபமடைந்த யானை வேகமாக திரும்பியது. திரும்பியதும் அலறிய சுற்றுலா பயணிகள் ஜீப்பை பின்புறமாக வேகமாக ஒட்டி கொண்டு வருகின்றனர். யானை விடாமல் துரத்திக்கொண்டு வேகமாக ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எப்படியோ வாகனத்தை வேகமாக திருப்பி ஒட்டிக்கொண்டு வந்து தப்பிவிட்டனர். யானை பாவம் என விட்டுவிட்டு சென்றது. நொடி பொழுதில் உயிர் போகும் சம்பவத்தை தவிர்த்து பயணிகள் தப்பித்தனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த சுதா ராமன் எழுதியிருப்பதாவது, “ஒவ்வொரு உயிர்களின் தனிப்பட்ட இடத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், சாகசங்கள் செய்வதற்கு காடுகள் இடம் கிடையாது, இடமும் விடியோ எடுத்தவர்கள் பற்றிய தகவலும் இல்லை” என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் விலங்குகளும் இந்த உலகில் வாழ்கின்றன, அவற்றின் நல்வாழ்வை நம் சுயநலத்திற்காக ஏற்கனவே பட்டாசு, புகை, காற்றுமாசு, தண்ணீர் மாசு போன்றவற்றால் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். நேரடியாகவும் சென்று அவர்களது இருப்பிடத்தை கெடுப்பது தவறு என்று பலர் கமெண்டில் கூறி வருகின்றனர்.

காடுகளை விலங்குகளின் நன்மைக்காகவே அரசும் வனதுறையும் பாதுகாத்து வருகின்றன. அவற்றை கெடுக்காமல் இருப்பது தான் நாட்டு மக்களாகிய நமது கடமை என்று ஒரு பயனர் கமென்டில் தெரிவித்திருந்தார்.

Let’s learn to respect the personal space of every other individual.

Forests are not the places for any adventure #ResponsibleTourism

(Location and credits not known) pic.twitter.com/4Gcfy9DDzr— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) November 18, 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories