அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

elephant
elephant

காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம்.

ஆனால் அவர்கள் அங்கு விலங்குகளோடு விலங்காக தங்கி அதற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில் சென்று வருவார்கள். ஆனால் சில சுற்றுலா பயணிகள் ஜீப்பில் வாகனங்களை தொடர்ந்து செல்வது, உணவு தருவது, அவற்றிடம் ஒலி எழுப்புவது போன்ற வேலைகள் செய்வது நம் ஊர்களில் வழக்கம்.

அப்போது கோபப்பட்டு சில விலங்குகள் எதிர்வினை ஆற்றும் பல வீடியோக்களை கண்டுள்ளோம். அது போன்று ஒரு யானையை பின்தொடர்ந்து சென்ற ஜீப்பை துரத்திய யானை வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

கலாம் விருது வாங்கிய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் யானை ஒன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று பேசாமல் நடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதனை மெதுவாக ஜீப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.

திடீரென கோபமடைந்த யானை வேகமாக திரும்பியது. திரும்பியதும் அலறிய சுற்றுலா பயணிகள் ஜீப்பை பின்புறமாக வேகமாக ஒட்டி கொண்டு வருகின்றனர். யானை விடாமல் துரத்திக்கொண்டு வேகமாக ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எப்படியோ வாகனத்தை வேகமாக திருப்பி ஒட்டிக்கொண்டு வந்து தப்பிவிட்டனர். யானை பாவம் என விட்டுவிட்டு சென்றது. நொடி பொழுதில் உயிர் போகும் சம்பவத்தை தவிர்த்து பயணிகள் தப்பித்தனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த சுதா ராமன் எழுதியிருப்பதாவது, “ஒவ்வொரு உயிர்களின் தனிப்பட்ட இடத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், சாகசங்கள் செய்வதற்கு காடுகள் இடம் கிடையாது, இடமும் விடியோ எடுத்தவர்கள் பற்றிய தகவலும் இல்லை” என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் விலங்குகளும் இந்த உலகில் வாழ்கின்றன, அவற்றின் நல்வாழ்வை நம் சுயநலத்திற்காக ஏற்கனவே பட்டாசு, புகை, காற்றுமாசு, தண்ணீர் மாசு போன்றவற்றால் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். நேரடியாகவும் சென்று அவர்களது இருப்பிடத்தை கெடுப்பது தவறு என்று பலர் கமெண்டில் கூறி வருகின்றனர்.

காடுகளை விலங்குகளின் நன்மைக்காகவே அரசும் வனதுறையும் பாதுகாத்து வருகின்றன. அவற்றை கெடுக்காமல் இருப்பது தான் நாட்டு மக்களாகிய நமது கடமை என்று ஒரு பயனர் கமென்டில் தெரிவித்திருந்தார்.

Let’s learn to respect the personal space of every other individual.

Forests are not the places for any adventure #ResponsibleTourism

(Location and credits not known) pic.twitter.com/4Gcfy9DDzr— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) November 18, 2021

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories