April 27, 2025, 10:19 PM
30.2 C
Chennai

முதல் போட்டியில் சதம் அடித்த 16வது இந்திய வீரர்!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் – 2ம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆட்டநேர இறுதியில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விக்கட் இழக்காமல் 129 ரன் எடுத்தது. அதற்கு முன்னர் இந்திய அணி உணவு இடைவேளைக்குச் சற்று பின்னர் வரை ஆடி 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியின் டிம்சௌதீ அற்புதமாக பந்து வீசினார். அவர் 69 ரன் கொடுத்து ஐந்து விக்கட் வீழ்த்தினார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஜேமிசன் 91 ரன் கொடுத்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்.
நான்கு விக்கட் இழப்பிற்கு 258 என்ற ஸ்கோரில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் ஜதேஜா விரைவில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சாஹாவும் வந்தவுடன் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியிலேய சதம் அடிக்கும் 16ஆவது இந்திய வீரரானார். இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள்:-
  1. லாலா அமர்நாத் 118 இங்கிலாந்து (1933)
  2. தீபக் ஷோடன் 110 பாகிஸ்தான் (1952)
  3. ஏஜி கிரிபால் சிங் 100* நியூசிலாந்து (1955)
  4. அப்பாஸ் அலி பெய்க் 112 இங்கிலாந்து (1959)
  5. ஹனுமந்த் சிங் 105 இங்கிலாந்து (1964)
  6. குண்டப்பா விஸ்வநாத் 137 ஆஸ்திரேலியா (1969)
  7. சுரிந்தர் அமர்நாத் 124 நியூசிலாந்து (1976)
  8. முகமது அசாருதீன் 110 இங்கிலாந்து (1984)
  9. பிரவின் ஆம்ரே 103 தென்னாப்பிரிக்கா (1992)
  10. சவுரவ் கங்குலி 131 இங்கிலாந்து (1996)
  11. வீரேந்திர சேவாக் 105 தென்னாப்பிரிக்கா (2001)
  12. சுரேஷ் ரெய்னா 120 இலங்கை (2010)
  13. ஷிகர் தவான் 187 ஆஸ்திரேலியா (2013)
  14. ரோஹித் சர்மா 127 வெஸ்ட் இண்டீஸ் (2013)
  15. பிரித்வி ஷா 134 வெஸ்ட் இண்டீஸ் (2018)
  16. ஷ்ரேயாஸ் ஐயர் 105 நியூசிலாந்து (2021)
ALSO READ:  IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

அஷ்வின் 22 பந்துகளில் 20 ரன் எடுத்தது இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நியூசிலாந்து அணியின் வில் யங், டாம் லாதம் இருவரும் நிதானமாக ஆடி 129 ரன் எடுத்தனர். கடைசி பத்து ஓவர்களில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் இந்த இரண்டு பேட்டர்களையும் தடுமாற வைத்தனர். இருப்பினும் நேற்று அடிக்கப்பட்ட ஸ்கோரான 254 கூட இன்று அடிக்கப்படவில்லை. நியூசிலாந்து அணி ஒரு பெரிய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் அடிக்க வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories