21-03-2023 8:56 PM
More
    Homeஅடடே... அப்படியா?மாப்பிள்ளைக்கு திருமண வயது ஆகலை.. நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பு!

    To Read in other Indian Languages…

    மாப்பிள்ளைக்கு திருமண வயது ஆகலை.. நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பு!

    marriage - Dhinasari Tamil

    நாகர்கோவில் அருகே திருமண நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளைக்கு 21 வயது பூர்த்தி ஆகாததால் திருமணத்தை நிறுத்திய சமூக நலத்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கருங்கல் ஊரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் அஸ்வின் ஜீனோ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    marriage 1 - Dhinasari Tamil

    இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தபோது அஸ்வினின் தாய் தனது மகனுக்கு 21 வயது முடிய வில்லை எனவே திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட சமூக நல அலுவலரிடம் புகார் அளித்தார்.

    இதனையடுத்து காதல் ஜோடிகள் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னர் மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகாதது தெரிய வந்ததையடுத்து ஐஸ்வர்யாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 − 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...