December 5, 2025, 12:16 PM
26.9 C
Chennai

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்சுகள்!

smart watch - 2025

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புரட்சியாக பார்க்கப்படுவது ஸ்மார்ட் வாட்ச். பல முன்னணி மற்றும் பிரபலமான மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய் பயனாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்று. ஒரே நிறுவனத்திலான ஸ்மார்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்சினை பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த சூழலில் பிரபல சாம்சங் நிறுவனம் தான் அறிமுகப்பட்டுத்தியுள்ள இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சுகளை மொபைல் இல்லாமலும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic என்னும் இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது.

samsung watch - 2025

இந்தியாவில் சற்று தாமதமாக அறிமுகமானாலும் , மேற்கண்ட ஸ்மாட் வாட்சுகள் Bluetooth-only மற்றும் LTE வசதி என்ற வசதிகளுடன் களமிறங்கியது. இதில் Bluetooth-only என்ற வசதியை பயன்படுத்துவதற்கு மொபைலின் ஸ்மார்ட் வாட்ச் செயலி தேவைப்படுகிறது.

LTE வசதி மூலம் ஸ்மார்ட் வாட்ச் தனித்து செயல்பட முடியும். சரி எப்படி மொபைல் இல்லாமல் ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

முதல் முறை இந்த வசதியின் மூலம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை இயக்க விரும்பினால் , turn on செய்ய வேண்டும் அல்லது முன்பே வாட்சினை பயன்படுத்துபவராக இருந்தால் reset செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு தோன்றும் கேள்விக்குறி (?) ஐகானை கிளிக் செய்து , பிறகு ‘tap here’ என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அறிவிப்பு ஒன்று தோன்றும். அதனை கவனமாக படித்து பார்த்துவிட்டு ‘Continue’ என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தோன்றும் அதனை படித்து பாருங்கள்..அதனை ஏற்றுக்கொண்டால் கீழே தோன்றும் ‘Next’ என்னும் வசதியை கிளிக் செய்து முன்னேறுங்கள்.

இப்போது உங்களிடம் சாம்சங் கணக்கிற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் இருந்தால் அதனை பயன்படுத்துங்கள் , இல்லை என்றால் Skip என்னும் வசதியை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

watch - 2025

அதன் பிறகு நீங்கள் இருக்கும் நாட்டின் நேரம் குறித்த விவரங்களை கொடுக்கப்பட்ட வசதியில் set செய்துக்கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளை திரும்ப பெறுவதற்கான PIN ஒன்றை உருவாக்க கேட்கும். உங்கள் விருப்பப்படி அதையும் உருவாக்குங்கள்.

இப்போது உங்கள் வாட்ச் மொபைல் இல்லாமல் செயல்பட தயாராகிவிடும் . பின்னர் நீங்கள் மொபைலுடன் இணைக்க விரும்பினால் Settings > Connect to phone > ✔ என்னும் வசதிக்கு செல்லுங்கள். பின்னர் ஏற்கனவே பதிவு செய்த நான்கு இலக்க PIN நம்பரை பதிவு செய்து மொபைலுடன் பயன்படுத்த தொடங்கலாம்.

மொபைல் இல்லாமல் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை உடற்பயிற்சி செய்தல், மலையேறுதல் போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.

ஆனால் மொபைலுடன் இணைத்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் சில வசதிகள் இம்முறை பயன்படுத்தலின் பொழுது கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories