25-03-2023 11:18 PM
More
    Homeஅடடே... அப்படியா?மலையில் கிடைத்த விலையுயர்ந்த கற்கள் பெட்டி.. இந்திய பயணிக்கு சொந்தம்.. ஒப்படைத்த நபர்!

    To Read in other Indian Languages…

    மலையில் கிடைத்த விலையுயர்ந்த கற்கள் பெட்டி.. இந்திய பயணிக்கு சொந்தம்.. ஒப்படைத்த நபர்!

    Gemstone1 - Dhinasari Tamil

    பிரான்சில் மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு கிடைத்த விலையுயர்ந்த கற்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பிரான்சில் கடந்த 2013 ஆம் வருடத்தில் ஒரு நபர் மலையேற்றத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு உலோகப் பெட்டி கிடைத்திருக்கிறது.

    அதனை திறந்து பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். அதில், மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இருந்தது. எனினும், அந்த பெட்டிக்குள் இருந்த உறையில், “Made in India” என்று எழுதப்பட்டிருந்தது.

    எனவே அந்த நபர் உடனடியாக அந்த பெட்டியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    அவரது நேர்மையை பலரும் பாராட்டினர். மேலும், Sylvain Merly என்ற காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த விலை உயர்ந்த கற்களை பார்த்தவுடன் அவர் எடுத்து சென்றிருக்கலாம்.

    ஆனால், மலை சிகரத்தில் இறந்து போன நபருக்குரியது என்று தெரிந்தவுடன், உடனடியாக காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

    இந்த கற்களின் ஒட்டு மொத்த மதிப்பு 2 லட்சத்து 46 ஆயிரம் யூரோக்கள். அதாவது கடந்த 1950 மற்றும் 1966 ஆம் வருடங்களில் ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் Mont Blanc என்ற மலைச்சிகரத்தில் 2 ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்குள்ளாகியது.

    Gemstone - Dhinasari Tamil

    அதற்குப்பின், மலையேற்றத்திற்கு சென்றவர்கள், விபத்துக்குள்ளான விமானங்களின் பாகங்கள், சூட்கேஸ் போன்றவற்றை கண்டெடுத்தனர். சிலர் சடலங்களையும் கண்டெடுத்தனர். அந்த வகையில் இவருக்கு விலையுயர்ந்த கற்கள் கிடைத்துவிட்டது.

    அவை, இந்திய பயணிக்குரியது என்று தெரிந்தவுடன், பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த கற்களின் உரிமையாளர் அல்லது அவரின் குடும்பத்தார் யாரையாவது கண்டுபிடித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்நிலையில், அந்த கற்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்த நபருக்கு, 1,50,000 யூரோக்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...