மலையில் கிடைத்த விலையுயர்ந்த கற்கள் பெட்டி.. இந்திய பயணிக்கு சொந்தம்.. ஒப்படைத்த நபர்!

Gemstone1 - 2026

பிரான்சில் மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு கிடைத்த விலையுயர்ந்த கற்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் கடந்த 2013 ஆம் வருடத்தில் ஒரு நபர் மலையேற்றத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு உலோகப் பெட்டி கிடைத்திருக்கிறது.

அதனை திறந்து பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். அதில், மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இருந்தது. எனினும், அந்த பெட்டிக்குள் இருந்த உறையில், “Made in India” என்று எழுதப்பட்டிருந்தது.

எனவே அந்த நபர் உடனடியாக அந்த பெட்டியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அவரது நேர்மையை பலரும் பாராட்டினர். மேலும், Sylvain Merly என்ற காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த விலை உயர்ந்த கற்களை பார்த்தவுடன் அவர் எடுத்து சென்றிருக்கலாம்.

ஆனால், மலை சிகரத்தில் இறந்து போன நபருக்குரியது என்று தெரிந்தவுடன், உடனடியாக காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

இந்த கற்களின் ஒட்டு மொத்த மதிப்பு 2 லட்சத்து 46 ஆயிரம் யூரோக்கள். அதாவது கடந்த 1950 மற்றும் 1966 ஆம் வருடங்களில் ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் Mont Blanc என்ற மலைச்சிகரத்தில் 2 ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்குள்ளாகியது.

Gemstone - 2026

அதற்குப்பின், மலையேற்றத்திற்கு சென்றவர்கள், விபத்துக்குள்ளான விமானங்களின் பாகங்கள், சூட்கேஸ் போன்றவற்றை கண்டெடுத்தனர். சிலர் சடலங்களையும் கண்டெடுத்தனர். அந்த வகையில் இவருக்கு விலையுயர்ந்த கற்கள் கிடைத்துவிட்டது.

அவை, இந்திய பயணிக்குரியது என்று தெரிந்தவுடன், பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த கற்களின் உரிமையாளர் அல்லது அவரின் குடும்பத்தார் யாரையாவது கண்டுபிடித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், அந்த கற்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்த நபருக்கு, 1,50,000 யூரோக்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories