கண்கவர் காசி விஸ்வநாதர் கோவில்: திறந்து வைத்த பிரதமர்!

Kasi vishvanath 2 - 2026

வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

Kasi - 2026

இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இந்தக் கோவில் அருகே ஓடும் கங்கை நதியின் படித்துறைகளில் நீராடுவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Kasi 1 - 2026

இதன் ஒரு பகுதியாக இந்தக் கோவிலில் சுமார் 5.50 லட்சம் சதுர அடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இவற்றில் 70 சதவீதம் பசுமை திட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கு விஸ்வநாதர் கோவிலை கங்கைக்கரை உடன் நேரடியாக இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

kasi2 - 2026

இதன் மூலம் பண்டை காலத்தைப் போலவே சிவபக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடிய பிறகு நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இங்கு அருங்காட்சியகம், நூலகம், பல்நோக்கு அரங்குகள், பக்தர்கள் தங்குமிடம் உணவு கூடங்கள் என 23 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

kasi3 - 2026

₹ 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ‘ருத்ராக்ஷ்’ஐ திறந்து வைத்தார்.

Kasi 4 - 2026

இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் சர்வதேச வணிகர்களை ஈர்க்கும் இடமாக வாரணாசி திகழ்ந்து வருகிறது.

சாலை உள்கட்டமைப்பை பொறுத்தவரை மொத்தம் 34 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு முக்கிய சாலைகளை ₹ 1,572 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.

Kasi 6 - 2026

16.55 கிமீ நீளமுள்ள வாரணாசி ரிங் ரோடு ₹ 759 கோடி ரூபாய் செலவிலும், 17.25 கிமீ பாபத்பூர்-வாரணாசி நான்கு வழிச்சாலை ₹ 812 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வந்த காசி விசுவநாதர் கோவில் மேம்பாட்டு பணியின்போது இந்தப்பகுதியில் மறைந்துள்ள 40க்கும் மேற்பட்ட கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Kasi Vishwanath - 2026

கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் அனைத்தும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இந்த கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

இதையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரமும் சாமி சன்னதிக்கு மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

pm - 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவை மேலும் சிறப்பிப்பதற்காக நாடு முழுவதிலிருந்து அந்தணர்களும் துறவிகளும் வரவழைக்கபட்டுள்ளதாகவும்

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாரணாசிக்கு வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வரணாசி ஆணையர் தீபக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

kasi5 - 2026

இந்த திறப்பு விழா நாடு முழுவதும் 51,000 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories