விமான டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தம்!

Published:

flight
flight

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சிங்கப்பூரில் நான்கு வாரங்களுக்கு புதிய விமான டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை புதிய டிக்கெட்டுகள் முன்பதிவை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நான்கு வாரங்களுக்கு புதிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img