15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ? (லக்னோ: எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்.) உ.பி., மாநிலம் கான்பூர் அருகே உளள ரசூலாபாத்தி்ல் வசித்து வரும் இரு குடும்பத்தினரிடையே கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண தினம் நெருங்கி வந்த வேளையில் மணமகள் மணமகனிடம் விளையாட்டாக எளிய கணக்கு ஒன்றை கேட்டார். கணக்கிற்கான பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் எளிய வகை கணக்கிற்கு கூட விடை சொல்ல தெரியாதவனை திருமணம் செய்ய முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியது மட்டு மல்லாமல் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகனின் வீ்ட்டார் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத மணமகளின் தந்தை போலீசார் மூலம் மணமகனிற்கு அளித்த வரதட்சனை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார். 15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ?மணப்பெண் கேட்ட கேள்வி இது தான். மாப்பிள்ளை உடனடியாக அளித்த பதில் 17 என்பதாகும்.
எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனுக்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

