பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது, கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை அடுத்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கோட்டை – கொல்லம் (வண்டி எண்: 06659) இடையே காலை 11.35 மணிக்கும், கொல்லம் – செங்கோட்டை (06660) இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் 16ஆம் தேதி (இன்று) முதல் 21ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.