வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு! ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

சென்னை:
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணையை மாற்றம் செய்தது.

மேலும், மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, நீதிபதிகள், நீதிமன்றங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரப்பப் படுவதாக வேதனை தெரிவித்தது.

வைரமுத்துவின் அவதூறுக் கட்டுரையை தடை செய்ய அல்லது ரத்து செய்ய, செல்லாததாக்க அறிவிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மயிலை சத்யா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, எந்த மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், இத்தகைய நிலை கவலையை அளிக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img