கிராஸ் பண்ணும் பாட்டிக்காக ரோட்டை பிளாக் செய்த இளைஞர்! குவியும் பாராட்டு!

Published:

help - 2026

பொது இடத்தில் நடமாடும்போது செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்களும் சமூகப் பணிக்கு இணையானது

வைரலாகியிருக்கும் வீடியோவிலும், மூதாட்டி சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் ரோட்டை பிளாக் செய்கிறார். அவரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் மெதுவாக நடக்கிறார். பிஸியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில் யாரும் மூதாடிக்காக காத்திருப்பதாக தெரியவில்லை.

வேகமாக கடந்து சென்று கொண்டே இருக்கின்றனர். மூதாட்டியும் மெதுவாக சாலையை கடக்க முயற்சிக்கிறார். இதனை காரில் வரும் ஒரு நபரும், இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞரும் கவனிக்கின்றனர். மூதாட்டியை கவனித்த காரில் இருக்கும் நபர், தன்னுடைய காரை சாலையிலேயே நிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், மற்ற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முயற்சிக்கின்றனர். இதனைப் பார்த்த இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை கார்களுக்கு முன்சென்று நிறுத்தி, மூதாட்டி சாலையை கடக்க உதவுகிறார். அவரின் இந்த சமயோசித்த புத்தியுடன் கூடிய சமூக சிந்தனை, காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img