உலகிலேயே மிகப்பெரிய பால்பாய்ன்ட் பேனா ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்திய புராணக் காட்சிகளுடன் பொறிக்கப்பட்ட இந்த பேனா, ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது
15 அடி நீளமும், 37 கிலோ எடையும் கொண்ட இந்த பேனாவை சாதாரணமாக பயன்படுத்த முடியாது என்றாலும், பேனா காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
இந்தப் பேனாவை பயன்படுத்த குறைந்தது ஐந்து பேர் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.