எருமை, பசு,  சக்கரம்.. ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு கண்திருஷ்டியா?

Capture.jpeg 1 - 2026

-வந்தே பாரத் ரயில் மூன்றாவது நாளாக  செய்தியில் இடம்பெற்றுவிட்டது. புதுடெல்லி – வாராணசி இடையே சனிக்கிழமை காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலின் சக்கரம் ‘ஜாம்’ ஆனதால், பயணிகள் வேறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நல்லவேளையாக, பணியிலிருந்த ஊழியர் சக்கரம் ஜாம் ஆகியிருப்பதைக் கவனித்ததால், பாதி வழியில் ரயில் இயக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை சக்கரங்கள் ஜாம் ஆகியிருப்பது கவனிக்கப்படாமல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குஜராத்தில் வெள்ளிக்கிழமை பசு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியது. ஏற்கெனவே வியாழக்கிழமை எருமைக் கூட்டம் மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் என்ஜினின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி சேதமடைந்தது. 

தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.டெல்லியிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு, பிற்பகலில் அதிலிருந்த பயணிகள் சதாப்தி ரயிலில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்
மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை மும்பை- காந்திநகா் இடையே அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். 

முதல் சம்பவமாக அகமதாபாத் அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் நின்றிருந்த எருமைக் கூட்டம் மீது இந்த ரயில் மோதி இருந்தது. இதில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டது. பின்னா், மும்பை வந்ததடைந்ததும் ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி உடனடியாக மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், இரண்டாவது சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.இரண்டாம் சம்பவமாக, குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது ஒரு பசு மீது மோதியது. இதில் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியதாகவும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி சுமித் தாக்குா் தெரிவித்திருந்தார்..

ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கால்நடைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தவிா்க்க முடியாதது. விபத்துகளின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வந்தே பாரத் ரயில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி முழுமையாக மாற்றக் கூடியதாகும். அடுத்தகட்டமாக மேம்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும்’ என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories