ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயத்திற்காக அணையை திறந்து வைத்த அமைச்சர்..

FB IMG 1667668493405 - 2026
images 21 - 2026

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுடால் பேச்சுக்கு தான் லாயக்கு சென்னையில் வேலையை முடித்தது எல்லாம் நாங்கள் தான் என் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயத்திற்காக அணையை திறந்து வைத்தபோது பேசினார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயத்திற்காக அணையை திறந்து வைத்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவுகள் பெரியார் அணை திறக்கப்பட்டது.

முழு கொள்ளளவான 47 அடியில் 45 அடி நிரம்பி உள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில்,வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,வரும் 28 ந்தேதி வரை நாள்தோறும் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் மழையின் அளவை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும்,பெரியாறு பிரதானக்கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும் என்றார்..

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அவரவர் பகுதிகளில் மழையினால் காற்றினால் ஏற்படப்போகும் இடையூறுகளை முன்னரே அறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில், கடந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இல்லாத வகையிலும் தண்ணீர் தேங்காமலும் முதலமைச்சர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்திற்கு பதில் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறந்த முறையில் செயலாற்றி இருந்தால் கடந்த வருடம் ஏன் சென்னையில் மழை நீர் தேங்கியது என்றும் கடந்த ஒரு வருடமாக திமுக ஆட்சியில் செய்த முன்னேற்பாடுகள் தான் தற்போது மழை நீர் உடனடியாக வழிவதற்கு காரணம் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சௌடால் பேச்சுக்கு தான் லாயக்கு என்று குற்றம் சாட்டினார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories