தை அமாவாசை 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடிடல்..

PTI1 24 2020 000038A1 - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் தை அமாவாசையையொட்டி சுமார் 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்தனர். 

வட இந்தியாவில் தை அமாவாசையை மௌனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி திதி, தர்ப்பணம் கொடுப்பது போல வட இந்தியாவில் ஏராளமானோர் கங்கை நதியில் நீராடி தர்ப்பணம் கொடுக்கின்றனர். இந்த சமயத்தில் உ..பி.யில் மாக் மேளா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான மாக் மேளா ஜனவரி 6, 2023ல் தொடங்கி பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது. கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை மதியம் 12 மணி வரை சுமார் 1.5 கோடி பக்தர்கள் கங்கை சங்கமத்தில் நீராடியுள்ளதாக பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தெரிவித்தார்.

மாக் மேளா கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் நாராயண் மிஸ்ரா தெரிவித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கங்கை சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் கால் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். 

தை அமாவாசையையொட்டி பல முக்கிய துறவிகள் கண்காட்சிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மொளரியாவும் சங்கமத்தில் நீராடினார். அடுத்த புனித நீராடல் ஜனவரி 26ஆம் தேதி வசந்த பஞ்சமி அன்றும், பிப்ரவரி 5ஆம் தேதி பூத்த பூர்ணிமா அன்றும் நடைபெறுகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று இறுதி நீராடலுடன் மாக் மேளா முடிவடைகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories