தேசிய மகளிர் குழுவின் உறுப்பினராக குஷ்பு..

Fp86jSvaYAItXu0 - 2026

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அக்கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நடிகை குஷ்பு, 2020 அக்டோபர் 12-ன் தேதி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கில் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில், கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தேசிய மகளிர் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக பேசிய குஷ்பு, “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு, பிரதமருக்கும், தேசிய மகளிர் ஆணையத்துக்கும் நன்றி. எனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருநாளும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இனி இன்னும் சுதந்திரமாக நீதியை பெற்றுத்தர நல்ல களம் அமைந்திருக்கிறது. இது கட்சி சார்ந்த பொறுப்பல்ல.அதனால் எனது குரல் நம் சமூக மக்கள் அனைவருக்காவும் இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் குரல் கொடுத்துவரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories