‘ரீல்ஸ்’ விட்ட #ஷர்மிளா உண்மைக் கதை; கமல் ஏன் கார் கொடுத்தார்?

sharmila coimbatore driver and kamalhasan - 2026

கோவை, பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா ஒரு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டு, ஓட்டுநர் பணியிலிருந்து விலகிய நிலையில் சகமல் அவரைப் பாராட்டி, அவருக்கு கார் வழங்கியுள்ளார். இது, ஒரு விளம்பரத்துக்காக கமல் இவ்வாறு செய்வதாக ஒரு தரப்பும், கமல் சத்தமின்றி உதவிகளைச் செய்து வருவதாக மற்றொரு தரப்பும் சமூக வலைதளத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கோவை பகுதியின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என ஷர்மிளா, சில மாதங்களுக்கு முன்பு தனியார் பேருந்து கம்பெனியில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். இளம் வயதில் பேருந்தை லாகவமாக இயக்கும் அவரது வீடியோக்கள் ரீல்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பின் பல்வேறு இயக்கத்தினர், சங்கத்தினர், கட்சியினர் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளையும் கொடுத்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்கள். குறிப்பாக, ஷர்மிளா நன்றாகவே மீடியா வெளிச்சத்தைத் தேற்றிக் கொண்டார்.

கோவை பாஜக., எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசனும் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்து பப்ளிசிட்டி மேனியாவில் கரைந்தார். அவரைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.,யும் பயணித்து ஷர்மிளாவை வாழ்த்தினார். கனிமொழி பயணித்த போது பயிற்சி நடத்துநர் ஒருவர் அவரிடமும் உடன் வந்தவர்களிடமும் டிக்கெட் கேட்டதாகவும் இதனை விரும்பாத ஓட்டுநர் ஷர்மிளா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,தொடர்ந்து பேருந்து நிறுவன அதிபரிடம் இப்பிரச்னையை எழுப்பிவிட்டு பணியிலிருந்து அவர் விலகியதாகவும் தெரிகிறது.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

இந்நிலையில், ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய காரை பரிசாக வழங்கி, “ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை அவர் மீண்டும் தொடர்வார்” எனக் கூறினார். கமல்ஹாசனின் இந்தச் செயல் சமூகத் தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சமூகத் தளங்களில் பல்வேறு கருத்துகள் இது குறித்து உலாவருகின்றன. அவற்றில் ஒன்று இது…

coimbatore sharmila driver22 - 2026

#ஷர்மிளா #உண்மை #கதை

கோவையில் கலைஞர் மகள் கனிமொழி பயணம் செய்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பேரூந்தில் கனிமொழியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்கள் டிக்கெட் எடுக்கவில்லை. பெண் நடத்துநர் அன்னத்தாய் கனிமொழியிடம் டிக்கெட் எடுங்கள் என்று சொன்ன பிறகே 6 பேருக்கு 20ரூ வீதம் 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து உள்ளனர்.

நான் கெஸ்டாக (விருந்தினராக)அழைத்து வந்தவரிடம் நீ எப்படி டிக்கெட் கேட்கலாம்? என ஓட்டுநர் ஷர்மிளா நடத்துநர் அன்னத்தாயிடம் தகராறு செய்துள்ளார். கெஸ்டாக அழைத்து வந்தவர்களுக்கும் சேர்த்து 120 ரூபாய் கொடுத்து ஷர்மிளாவே டிக்கெட் வாங்கி இருக்கலாம். அப்படி வாங்கி இருந்தால் நடிகர் கமலிடம் இருந்து இந்த 12 லட்சம் ரூபாய் கார் கிடைத்திருக்காது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த நடிகர் கமல் அதே பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த அன்னத்தாயை பாராட்ட மனம் வரவில்லை. காரணம் அந்த பெண் நடத்துனர் ரீல்ஸ் போட்டு தம்பட்டம் அடித்து பிரபலமாகாதவர் என்பதாலோ?!

தனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் அப் பணியில் இருந்து தாமே விலகிக் கொண்ட ஷர்மிளா தன்னை அப் பணியில் இருந்து நீக்கி விட்டனர் என்று நாடகம் ஆடி மக்களிடம் அனுதாபம் தேடிக் கொண்டார். தனக்கு பணி வழங்கி கௌரவித்த முதலாளி மீது வீண் பழி சுமத்தினார்.

ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துவரும் மணிமாறன் அவர்களின் பொதுநல சேவையைப் பாராட்டி ரஜினிகாந்த் அவர்கள் ஆம்புலன்ஸ் பரிசளித்ததை மீடியாக்கள் இவ்வாறு பெரிதுபடுத்தவில்லை.

சங்ககிரியைச் சேர்ந்த செல்வமணி என்ற ஒரு ஏழை பெண்மணி ஒருவர் 19 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் ரீல்ஸ் வீடியோ போடாததால் அவரை வாழ்த்த யாரும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த #வசந்த #குமாரி அவர்கள் 22 ஆண்டுகள் அரசு பேருந்தை விபத்து இல்லாமல் ஓட்டி ஓய்வு பெற்றவர். இவரை பாராட்ட வானதி சீனிவாசன், கனிமொழி, கமல் இவர்களுக்கு மனம் வரவில்லை.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

சேலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண் மேட்டூர் முதல் ஈரோடு வரை தனியார் பேருந்தை இன்றும் ஓட்டி வருகிறார்.

மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்து பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து #ஷர்மிளா நான் தான் தமிழ்நாட்டிலே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பொய் சொல்லி நடித்து அலைந்தவளை காரி துப்பாமல் கார் பரிசளித்து இருப்பது தவறான செயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories