மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: ரஜினி எச்சரிக்கை

Published:

rajini kamal - 2026

சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியவை:

தமிழக மக்களின் கோரிக்கை நியாயமானது; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்

*சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி தண்ணீர் தான்

*தமிழக மக்களின் ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான்

*காவிரி , ஸ்டெர்லைட் போராட்டம் இரண்டும் ஒன்றுதான்

*தமிழகம் காவிரிக்காக போராடும் தருணத்தில், ஐபிஎல் விளையாட்டு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்

*காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும்

*ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

*ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

*காவிரி விவகாரத்தில் அனைத்தும் அரசியல் தான் என்று கர்நாடக தேர்தல் குறித்த கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார்.

*கல்வி விவகாரத்தில் அரசியலை புகுத்தக் கூடாது; இந்த தருணத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமித்திருப்பது தவறு என்று குறிப்பிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

கமல் என்னுடைய எதிரி அல்ல; வறுமை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள், மீனவர்களின் கண்ணீர் தான் என் எதிரி என்று கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

காவிரி விவகாரம் தொடர்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் நடக்கும் மௌன அறவழி போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img