பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

Published:

vijaykanth speech temple - 2026

பேச்சு சீரடைய வேண்டுமானால், தேமுதிக., தலைவர் விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அன்பர்கள் சிலர்.

விஜயகாந்த் கடந்த ஏப். 5 அன்று சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா கோயிலுக்குச் சென்றார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனையும், ஈசன் சப்தபுரீஸ்வரரையும் வழிபட்டார். தனக்கு நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்பதற்காக அவர் அம்பிகையிடமும் பெருமானிடமும் வேண்டிக் கொண்டார்.

இந்தச் செய்தியைப் படித்த அன்பர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் திருகோலக்கா தல பதிகத்தை விஜயகாந்த்க்கு அனுப்பி வையுங்கள். நம் பரமனை நம்புவர்க்கு வழி காட்டிடுங்கள் விரைவில் குணம் பெறட்டும் என்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளன.

சரிவர பேச்சு வராத பலரும் இங்கு வந்து வழிபட்டுத் தெளிவாகப் பேசும் திறனைப் பெறுகிறார்கள். இந்தத் தலத்தில் பொற்றாளம் வழங்கும் விழா வரும் 21-4-18 இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது.

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img