எடியூரப்பாவிடம் காவிரி நீர் கேட்ட ஸ்டாலின், குமாரசாமியிடம் ஏன் கேட்கவில்லை தெரியுமா?

stalin 1 - 2026

சென்னை: கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாஜக., பெரும்பான்மை பலம் பெற்றுவிடும் என்று மதியம் தெரியவந்தது. அந்த நேரத்தில், எடியூரப்பாவுக்கு முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அந்த வாழ்த்தில், புதிதாக பொறுப்பேற்கும் பாஜக., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று தமிழில் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதாவது, தனது டிவிட்டர் பதிவில் உள்ள கருத்து, எடியூரப்பாவுக்கு புரியாவிட்டாலும், தனது அரசியல் கருத்து தமிழர்களுக்குப் புரிந்தால் போதும் என்ற நிலையில் அவ்வாறு பதிவிட்டிருந்தார். இதில், இதுவரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததையோ, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் தாம் காவிரி நீர் குறித்து இதுவரை வாய்திறக்காததையோ வெளிப்படுத்தவில்லை..

stalin tweets - 2026

கூட்டணி தர்மத்தின் பால், தனது மாநிலமான தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்த ஸ்டாலின், மத்திய அரசை மட்டுமே குறை கூறி சாடி வந்தார். தொடர்ந்து மத்திய பாஜக.,வின் ஊதுகுழல் என்று கூறி தமிழக அதிமுக., அரசையும் சாடி, அரசு கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், கூட்டத்தில் பேசாத விஷயங்களையும் வெளியில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே, கருத்துவேறுபாடுகளை மூட்டி விட்டார்.

இப்போது, மீண்டும் காங்கிரஸ் தயவில் குமாரசாமியின் ஆட்சி அமையவுள்ள சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில், குமாரசாமிக்கும் ஒரு வாழ்த்துப் பதிவினை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனால் இந்த முறை, கன்னட வெறியர்களான, தமிழக விரோதிகளான மஜத.,வினருக்கு பயந்து கொண்டு, தமிழில் பதிவிடாமல், ஆங்கிலத்தில் பதிவிட்டார். அதிலும், காங்கிரஸ் மஜத., என மதசார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்படும் இந்த மாற்றம் இனி வரும் தேர்தல்களிலும் தொடரட்டும் என்று கூறினாரே தவிர, காவிரி நீரை திறக்க குமாரசாமி அரசு உறுதி கூற வேண்டும் என்று குறிப்பிடவே இல்லை.

ஸ்டாலினின் இந்தப் போக்கை ஊடகங்களோ அரசியல் கட்சிகளோ பெரிதாக விமர்சனமோ விவாதமோ செய்யவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

செயல் தலைவர் ஸ்டாலினின் செயலுக்கு விளக்கம் தருவது போல் ஒருவர் இட்டிருந்த கருத்து கவனம் பெற்றது. ஏற்கெனவே காவிரி நீர் கேட்டதற்கு, காவிரியில் நீர் வராது, கன்னடர்களின் சிறு நீர்தான் வரும் என்று பதிலளித்த குமாரசாமியிடம், இப்போது காவிரி நீர் குறித்து கேட்டால், வீட்டுக்கு சிறுநீரை அனுப்பிவிட்டாரெனில் என்ன செய்வது என்ற பயத்தினால்தான் ஸ்டாலின் அவ்வாறு கேட்கவில்லை என்று கலாய்த்திருக்கிறார் ஒருவர்.

 

இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தின் படியே, எடியூரப்பா ஆட்சியில் இருந்த இரண்டரை நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசுத் தரப்பு மறுப்பு தெரிவிக்காமல், உச்ச நீதிமன்றத்தில் வழிமொழிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக., அரசு இருந்த போதுதான் இது சாத்தியமானது. ஆனால், காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இருந்த போது, வாரியமா ஸ்கீமா என்று குழப்பி, பல நாட்கள் தாமதத்தை ஏற்படுத்த வைத்து, தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் துரோகம் செய்து வந்தது வரலாற்றில் பதியப்பட்டு விட்ட உண்மையாகி விட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories