எடியூரப்பாவிடம் காவிரி நீர் கேட்ட ஸ்டாலின், குமாரசாமியிடம் ஏன் கேட்கவில்லை தெரியுமா?

stalin 1 - 2026

சென்னை: கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாஜக., பெரும்பான்மை பலம் பெற்றுவிடும் என்று மதியம் தெரியவந்தது. அந்த நேரத்தில், எடியூரப்பாவுக்கு முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அந்த வாழ்த்தில், புதிதாக பொறுப்பேற்கும் பாஜக., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று தமிழில் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதாவது, தனது டிவிட்டர் பதிவில் உள்ள கருத்து, எடியூரப்பாவுக்கு புரியாவிட்டாலும், தனது அரசியல் கருத்து தமிழர்களுக்குப் புரிந்தால் போதும் என்ற நிலையில் அவ்வாறு பதிவிட்டிருந்தார். இதில், இதுவரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததையோ, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் தாம் காவிரி நீர் குறித்து இதுவரை வாய்திறக்காததையோ வெளிப்படுத்தவில்லை..

stalin tweets - 2026

கூட்டணி தர்மத்தின் பால், தனது மாநிலமான தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்த ஸ்டாலின், மத்திய அரசை மட்டுமே குறை கூறி சாடி வந்தார். தொடர்ந்து மத்திய பாஜக.,வின் ஊதுகுழல் என்று கூறி தமிழக அதிமுக., அரசையும் சாடி, அரசு கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், கூட்டத்தில் பேசாத விஷயங்களையும் வெளியில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே, கருத்துவேறுபாடுகளை மூட்டி விட்டார்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இப்போது, மீண்டும் காங்கிரஸ் தயவில் குமாரசாமியின் ஆட்சி அமையவுள்ள சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில், குமாரசாமிக்கும் ஒரு வாழ்த்துப் பதிவினை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனால் இந்த முறை, கன்னட வெறியர்களான, தமிழக விரோதிகளான மஜத.,வினருக்கு பயந்து கொண்டு, தமிழில் பதிவிடாமல், ஆங்கிலத்தில் பதிவிட்டார். அதிலும், காங்கிரஸ் மஜத., என மதசார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்படும் இந்த மாற்றம் இனி வரும் தேர்தல்களிலும் தொடரட்டும் என்று கூறினாரே தவிர, காவிரி நீரை திறக்க குமாரசாமி அரசு உறுதி கூற வேண்டும் என்று குறிப்பிடவே இல்லை.

ஸ்டாலினின் இந்தப் போக்கை ஊடகங்களோ அரசியல் கட்சிகளோ பெரிதாக விமர்சனமோ விவாதமோ செய்யவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

செயல் தலைவர் ஸ்டாலினின் செயலுக்கு விளக்கம் தருவது போல் ஒருவர் இட்டிருந்த கருத்து கவனம் பெற்றது. ஏற்கெனவே காவிரி நீர் கேட்டதற்கு, காவிரியில் நீர் வராது, கன்னடர்களின் சிறு நீர்தான் வரும் என்று பதிலளித்த குமாரசாமியிடம், இப்போது காவிரி நீர் குறித்து கேட்டால், வீட்டுக்கு சிறுநீரை அனுப்பிவிட்டாரெனில் என்ன செய்வது என்ற பயத்தினால்தான் ஸ்டாலின் அவ்வாறு கேட்கவில்லை என்று கலாய்த்திருக்கிறார் ஒருவர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

 

இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தின் படியே, எடியூரப்பா ஆட்சியில் இருந்த இரண்டரை நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசுத் தரப்பு மறுப்பு தெரிவிக்காமல், உச்ச நீதிமன்றத்தில் வழிமொழிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக., அரசு இருந்த போதுதான் இது சாத்தியமானது. ஆனால், காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இருந்த போது, வாரியமா ஸ்கீமா என்று குழப்பி, பல நாட்கள் தாமதத்தை ஏற்படுத்த வைத்து, தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் துரோகம் செய்து வந்தது வரலாற்றில் பதியப்பட்டு விட்ட உண்மையாகி விட்டது!

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories