செப்.5 பேரணி நேரலை..?! இடைத்தேர்தலில் போட்டி..! அழகிரியின் அதிரடிகள்!

alagiri - 2026

மதுரை: இன்று திமுக., தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இது குறித்துக் கூறுகையில், திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. இடைத் தேர்தல் வந்தால், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றார்.

வரும் ஆக.28ம் தேதி திமுக., பொதுக் குழுவில் ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதி சமாதி நோக்கி பேரணியை நடத்தவுள்ள அழகிரி, அதை லைவ்வாக ஒளிபரப்ப அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.

கருணாநிதி காலமான நிலையில், கட்சி ரீதியிலான பிரச்னையை கிளப்பினார் அழகிரி. கட்சி நிதி குறித்து அவர் கூறிய கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், தன் பின்னால் திமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பதாக அவர் கூறினார்.மேலும் தான் திமுகவுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்று  கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதியின் சமாதி உள்ள மெரினா கடற்கரைக்கு பேரணி செல்கிறார். தன்னுடன் ஒரு லட்சம் பேர் அதில் பங்கேற்பர் என்று கூறிய அழகிரி, தனது நடை பயணம் திமுகவில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

அழகிரியின் இந்தப் பேச்சால் திமுக நிர்வாகிகள் சற்று கலக்கம் அடைந்தனர்.  அழகிரியின் நடைபயணத்தை சன் டிவியோ அல்லது கலைஞர் டிவியோ நேரடி ஒளிப்பரப்பு செய்யாது. இது அழகிரிக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே தெரியும்.

இதனால் தனது நடைப் பயணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்து திமுக மத்தியில் சலசலப்பை உண்டாக்க ஒரு வியூகத்தை அழகிரி வகுத்து வருகிறார். அதன்படி மற்ற செய்தி சேனல்களிடம் தனது பேரணியை செப்டம்பர் 5ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது முயற்சி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories