அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!

stalin kanimozhi - 2026

சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த தலைவர் குறித்து பேசப்பட்டது. அதில், ஸ்டாலினை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டது. அடுத்து வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசிபெற்றனர். பின்னர், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று தங்களது வேட்புமனுவை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து வேட்புமனுவை கலைஞர் படத்தின் அருகே வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தயாளு அம்மாளிடம் இருவரும் ஆசி பெற்றனர். அப்போது தயாளு அம்மாள் இருவருக்கும் நெற்றியில் திருநீறு இட்டு ஆசி அளித்தார். பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

stalin mother - 2026

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திமுக.,வைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்.

இன்று மாலை 4 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிவடைந்தது. அப்போது, ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனை திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். எனவே, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு 28ஆம் தேதி முறையாக வெளியாகும் என்றார் ஆர்.எஸ்.பாரதி. பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு செய்யவில்லை. எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories