அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!

stalin kanimozhi - 2026

சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த தலைவர் குறித்து பேசப்பட்டது. அதில், ஸ்டாலினை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டது. அடுத்து வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசிபெற்றனர். பின்னர், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று தங்களது வேட்புமனுவை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து வேட்புமனுவை கலைஞர் படத்தின் அருகே வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தயாளு அம்மாளிடம் இருவரும் ஆசி பெற்றனர். அப்போது தயாளு அம்மாள் இருவருக்கும் நெற்றியில் திருநீறு இட்டு ஆசி அளித்தார். பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

stalin mother - 2026

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திமுக.,வைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்.

இன்று மாலை 4 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிவடைந்தது. அப்போது, ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனை திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். எனவே, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு 28ஆம் தேதி முறையாக வெளியாகும் என்றார் ஆர்.எஸ்.பாரதி. பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு செய்யவில்லை. எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories