அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!

stalin kanimozhi - 2026

சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த தலைவர் குறித்து பேசப்பட்டது. அதில், ஸ்டாலினை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டது. அடுத்து வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசிபெற்றனர். பின்னர், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று தங்களது வேட்புமனுவை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து வேட்புமனுவை கலைஞர் படத்தின் அருகே வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தயாளு அம்மாளிடம் இருவரும் ஆசி பெற்றனர். அப்போது தயாளு அம்மாள் இருவருக்கும் நெற்றியில் திருநீறு இட்டு ஆசி அளித்தார். பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

stalin mother - 2026

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திமுக.,வைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்.

இன்று மாலை 4 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிவடைந்தது. அப்போது, ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனை திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். எனவே, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு 28ஆம் தேதி முறையாக வெளியாகும் என்றார் ஆர்.எஸ்.பாரதி. பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு செய்யவில்லை. எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories