கற்சிலைக்கு கண்ணாடியும் கைத்தடியும்! ஈ.வே.ரா., வை கலாய்க்கும் டிவிட்டர்வாசிகள்!

Published:

police evr statue - 2026

சென்னை: திராவிடர் கழகத்தை தொடங்கிய  ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140வது பிறந்த நாளான இன்று, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பகுத்தறிவுத் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டிவிட்டரில் கருத்து யுத்தமும் களை கட்டியிருக்கிறது.  அதில், கற்சிலைக்கு எதுக்கு கைத்தடியும், கண்ணாடியும். கண்ணாடியால் அந்த கற்சிலை பார்வை பெறப் போகிறதா, அல்லது கைத்தடி இல்லாவிட்டால் சிலை கீழே விழுந்துவிடுமா என்று பகுத்தறிவுடன் கேள்வி எழுப்பியுள்ளார்கள் சிலர்.

தன் மீது மாலை போடுவதைம், செருப்பு வீசுவதையும் சிலைதான் உணருமா? அல்லது ஏற்கெனவே செத்துப் போன அந்த நபருக்குத்தான் தெரியுமா? என்று பகுத்தறவுடன் கேள்வி எழுப்பிகிறார்கள் சிலர். ஈ.வே.ரா., மட்டுமல்ல, திருக்குவளை மு.கருணாநிதியை முன்வைத்தும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

டிவிட்டர் யுத்தத்தில் சில

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img