December 5, 2025, 7:05 PM
26.7 C
Chennai

வரலாற்றில் முதல் முறையாக… நேதாஜி தொப்பி அணிந்த தலைவராக … மோடி!

modi nethaji cap - 2025

நேதாஜியின் ஆசாத் – ஹிந்த் இராணுவம் அமைக்கப்பட்ட 75 ஆம் ஆண்டு விழாவை தில்லியில் கொடி ஏற்றி கொண்டாடினார் பிரதமர் மோடி !

அசாத் ஹிந்த் இராணுவத்தை கவுரவித்து , நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மோடி புகழாரம்!

ஒரு குடும்பம் மட்டுமே விடுதலைப் போரில் ஈடுபட்டது போன்ற மாயையை உறுவாக்க பல தியாகிகளை மறக்கடிக்கச் செய்த காங்கிரஸ் சதியை அம்பலப்படுத்தினார் பிரதமர் மோடி!

ஆசாத் ஹிந்த் படைக்கு ஆதாரமாக இருந்தது நம் தமிழகம் ! இத்தனை காலம் மறைக்கப்பட்ட நம் தமிழர்களின் தியாகத்தை மதித்த பிரதமர் மோடிக்கு தமிழர்கள் நன்றி தெரிவிக்கிறோம் !

தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு உதவிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற மகான்களின் தியாகத்தை மதித்த மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

சர்தார் படேல் , அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸ் குடும்ப நலனுக்காக மறக்கடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் உரை , குடும்ப அரசியலிலிருந்து , ஜனநாயக அரசியலுக்கு நாட்டை எடுத்துச் செல்லும் முயற்சியாகத் தெரிகிறது !

வாழ்க நேதாஜி போசின் புகழ் !

ஆசாத் இந்து சர்க்காரின் 75-வது ஆண்டுவிழா டெல்லியில் 21-10-2018 அன்று நடந்தது. இதில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பாரத பிரதமர் மோடி அதன்பின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பை யாரும் மறக்க முடியாது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் கனவின்படி, இந்திய ராணுவம் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நேதாஜியின் கனவுகள் முழுமையாக நிறைவடையவில்லை. சுதந்திரத்துக்குப்பின், இந்தியா பல்வேறு முக்கிய மைல்கல்லைக் கடந்து முன்னோக்கி சென்று வருகிறது, ஆனால், புனிதமான புதிய உச்சத்தை இன்னும் அடையவில்லை.

ஆனால், இந்த இலக்கை அடைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதிபூண்டுள்ளது. பல்வேறு சக்திகள் நம்மீது தாக்குதல் நடத்திய போதிலும் கூட புதிய இந்தியா எனும் இலக்கு மூலம் அடைவோம். புதிய இந்தியா என்பது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என்ன நினைத்தாரோ, உருவகமாக்கினோரோ அதுதான்.

நேதாஜியால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு இந்தியரும், நமக்கு எதிரான சக்திகளுடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்து, நாட்டின் கட்டமைப்புக்கு முழு அளவில் பங்களிப்பு செய்வது கடமையாகும்.

தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய முதல் பாரத பிரதமர் மோடி ஜீ!ஆனால், கடந்த காலங்களில் இருந்த அரசு ஆங்கிலேய மனப்பான்மையுடன் இருந்து விட்டது.  ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த நோக்கத்தை மாற்றி இருக்கிறது.

நேதாஜியின் நோக்கத்தின்படி, நாட்டின் இறையாண்மை மிகவும் முக்கியம். நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்தால், இரட்டை வலிமையுடன் பதிலடி கொடுப்போம். நேதாஜி கண்ட கனவின்படி இந்தியா ராணுவத்தை உருவாக்கி வருகிறது, அதை நோக்கி நகர்கிறது என்று நான் கூறுவேன். நம்முடைய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பங்கள், நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் போன்றவை கலந்து உள்ளன. நம்முடைய ராணுவத்தின் வலிமை என்பது சுயபாதுகாப்புதான், இது எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும்.

இந்தியா ஒருபோதும் மற்றவர்களின், மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்கும் பேராசையுடன் செயல்பட்டது கிடையாது. அந்த எண்ணம் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளது, சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு மட்டுமே இருக்கிறது .

நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். முக்கியமாக வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் அவற்றின் மீது கவனம் செலுத்தினார். தற்போதைய பாஜக அரசும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories