ஒன்னரை லட்சம் ஈழத் தமிழரைக் கொன்றவர்களுக்கு நாங்கள் பாவமன்னிப்பு தரமுடியாது ராகுல்!

IMG 20190313 WA0025 - 2026

என் தந்தை கொலையில் தொடர்புடைய 7 பேரையும் மன்னித்துவிட்டோம்; யார் மீதும் வெறுப்பு இல்லை: ராகுல் காந்தி.

குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை. அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது” எனத் தெரிவித்தார்

  1. நிரபராதிகள் ஏழுபேரையும் விடுதலை செய்யுங்கள் என்று அற்புதம்மாளிருந்து, ஓசிசோறு போராளி வரைக்கும் கூவிகிட்டு இருக்காங்களே; இந்த ரெண்டுல எத உண்மைன்னு எடுத்துகிறது?

  2. உங்க அப்பன் மட்டும் சாகலே, கூடவே பதினேழுபேரு செத்தாங்க, அவங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யாரு பதில் சொல்லறது? அவங்க சார்பா மன்னிக்கறதுக்கு, நீ யாரு, வெண்ணை.

  3. ஏழுபேர், ஏழுபேர்ன்னு கூவிட்டிருக்கீங்களே, அதுல நாலுபேர் நம்ம நாட்டை சேர்ந்தவங்க, அது தெரிஞ்சே கூவிட்டு இருந்தா, லோக்கல் கவுன்சிலருக்கு போட்டியிடக்கூட தகுதி இல்லாதவனை ஆயிடுவே; தெரியாம கூவிட்டு இருந்தா, இப்படி ஒரு கூமுட்டையை எப்படி, தலைவனா ஏத்துக்கறது?

  4. இவர்களுக்கெல்லாம் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கருணை அடைப்படையில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு, இன்னொருவழக்கில் ஆயுள்தண்டனையென்றால், 14 வருசமா, 20 வருசமா இல்லே, “ஆயுள்” வரை என்று உச்சநீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டபிறகு, யாரை ஏமாத்த இப்படி கூவிட்டிருக்குது இந்த பப்பு?

  5. ரத்தப்பணம் என்று உங்க பாட்டியின் செத்துப்போன கணவரின் மதநம்பிக்கைகளில் ஒன்று உண்டு; அதாவது, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைத்தவர் இழப்பீடு பணமாக கொடுத்து தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது. நான் தத்தாத்ரேயா கோத்ரா, கவுல் பிராமணன்னு சொல்லிக்கிட்டிருக்க மனுஷனுக்கு இப்படி ஒரு குறுக்குவழி தோணி இருக்கவேகூடாதே? எல்லாத்துக்கும் மேல, இந்திய பிரஜைன்னு சொல்லிட்டிருக்குற உனக்கு, இந்திய சட்டம் என்று ஒன்று இருக்கிறதே, அதுல இந்த ரத்தப்பணம் என்ற வழி கிடையாது என்று தெரியாதா? இல்லே, தாத்தாவின் டிஎன்ஏ இப்படி பேச வைக்குதா?

  6. பப்பு பேசுறது சரின்னா, இப்ப பொள்ளாச்சி விசயத்துல, பாலியல் கொடுமை செய்த மிருகங்களை, பாதிக்கப்பட்ட பெண்களோட பேச விடலாமா? பேச விட்டா, என்ன நடக்கும்? அந்த பொண்ணு மன்னிச்சிட்டேன்னு சொன்னா, இந்த மிருகங்களை தண்டனையின்றி வெளியில் உலவ விடலாமா? இதேபோல், எத்தனையோ கொலைகள், கற்பழிப்புகள், அத்தனைக்கும் இந்த லாஜிக் பொருந்துமல்லவா? என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுதா பப்பு?

  7. மோடிமீதான வெறுப்பு என்பது, தனது சொந்த தந்தையின் தியாகத்துக்கும், சிந்திய ரத்தத்துக்கும் விலைபேசுவது என்ற அளவுக்கு போய்விட்டதே? ராஜிவ், தமிழரை, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு நம்பினார் என்பது, அடிக்கடி பொதுமக்களோடு மிக இயல்பாக கலந்துவிடும் அளவுக்கு இருந்தது என்பது தெரியுமா பப்பு? அந்த நம்பிக்கையை பயன்படுத்தி, துரோகத்தால், வஞ்சினத்தாலும் வீழ்த்தப்பட்டார் உமது தந்தை என்பதை ஒரு நொடி யோசித்தாலே இப்படியெல்லாம் பேச வாய் வராதே பப்பு.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

எச்சரிக்கை: எனக்கு ராஜீவை, அவரது செயல்பாடுகளை, அறவே பிடிக்காது. ஆனால் எனது தேசத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்; அவரை, என்நாட்டின் பிரதமரை, எனது சொந்த மண்ணில் வெளிநாட்டு கூலிகளுடன் உள்ளூர் கருங்காலிகளும் இணைந்து கொன்றது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறேன்.

~ மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories