திமுக.,வுக்கு பணம் கொடுத்து வேலையில் சேர்ந்த ‘மெண்டல்’ தேர்தல் அதிகாரி?

Published:

srivilliputhur temple workers e1537272422113 - 2026கிறுக்குதனத்தின் உச்சம்…

ஆண்டாள் கோவில்களில் வரையபட்ட தாமரை கோலம் ஒரு கட்சியை குறிப்பதால் அழிக்க உத்தரவிட்டு அழித்த அட்டுழியம்…

இந்தக்காலம் தாயார் ஆண்டாள்
திருக்கல்யாண வைபவம் நடக்கக்கூடிய காலம் ஆகும்…. அதற்கான பத்து நாட்கள் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (13/03/2019) தான் நடைபெற்றது…..

இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் கோவிலின் உள்ளே தாமரை, மற்றும் சில பூக்களின் கோலங்கள் ஆங்காங்கே தாயார், பெருமாளை வரவேற்க வரையப்பட்டிருக்கின்றது…..

இன்று தாயார் சன்னிதிக்கு வந்த தேர்தல் அதிகாரி, தாயார் சன்னதிக்குள் தாயாரை வரவேற்க வரைந்த கோலங்கள் ஒரு கட்சியின் சின்னம் எனக்கூறி உடனே அந்த படங்களை அழிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்…

காவல்துறையினர் திருக்கோவிலின் செயல்அலுவலரை வலுக்கட்டாயப்படுத்தி அழித்து விட்டு தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டுள்ளனர்….

அழிக்க உத்தரவிட்ட அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியவில்லை போல தாயார் தாமரைப்பூவிலே தான் வீற்றிருப்பவள் என…..

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

தேர்தல் ஆணையத்திற்க்கும் அதிகாரிகளுக்கும் மதம் சம்பந்தப்பட்ட இடத்தில் என்ன பணி என புரியவில்லை….

இவ்வளவு பேசும் அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியுமா…..

காங்கிரஸின் சின்னம் கை
அதை அனைவரின் கைகளில் இருந்து எடுக்க உத்தரவிடுவானா??

தி.மு.க வின் சின்னம் உதயசூரியன்… அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா??

முசுலீம் கட்சி சின்னம் பிறை அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா??

தேர்தல் ஆணையமே மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இது போல கிறுக்கு பிடித்த அதிகாரிகளை தலையிட வைக்காதே……

அழிக்கப்பட்ட தாமரை கோலங்களை அந்த கிறுக்கு அதிகாரியின் செலவில் வரைந்து கொடுக்க உத்தரவிடு……

~புகழ் மச்சேந்திரன் புகழ்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் சன்னதியில் திருக்கல்யாண உற்சவத்திற்காக கொடியேற்றம் 10 நாட்கள் திருவிழா

இதற்காக பெண்கள் கோவிலை சுற்றி விடிய விடிய கண் முழித்து பெயிண்ட்டால் கோலம் வரைந்தனர்

இதை காலையில் பார்த்த காவல்துறை அதகாரி இந்த கோலங்களில் தாமரை பூ போன்று உள்ளது எனவே உடனடியாக அனைத்து கோலங்களையும் அழிக்க வேண்டும் என மிரட்டி

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

தன் மேற்பார்வையிலே அழிக்க வைத்தார்

இந்த அதிகாரிக்கு காங்கிரஸ் சின்னம் கை என்பது தெரியாது போல

#கோமாளிகள்சூழ்உலகு

கோவில்களில் கோலங்களை அழிப்பது அபசகுணம் இதனால் என்ன விளைவுகள் ஏற்பட போகிறதோ தாயாருக்கே வெளிச்சம்

முதலில் கோவில்களில் இருந்து காவல்துறையை வெளியேற்றனும் தற்போது அறநிலைய துறையை கூட காவல்துறை அரட்டி தனக்கு கீழே வைத்துக் கொண்டது

~ ராஜா ஶ்ரீவி.,

Related articles

Recent articles

spot_img