நாளை… திக் திக்..! கடும் கலக்கத்தில் இருக்கும் இரு ‘தமிழக’ கட்சிகள்!

Ramadoss and Anbumani meet to Vijayakanth - 2026

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் தேமுதிகவும் பாமகவும் இருப்பதாக கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் இந்த முறை தேர்தலை சந்தித்தன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாமகவுக்கு ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் ஆளாக ஏழு மக்களவைத் தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கி அதிமுக அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  ஆனால் கடைசி வரை மல்லுக் கட்டிய தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

2011க்குப் பின்னர் தேமுதிக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது! அது போல், பாமக.,வுன் அண்மைக் காலமாக தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது. இரு திராவிடக் கட்சிகளும் இன்றி தனித்து போட்டியிடுவது என்ற அக்கட்சியின் முடிவால் பாமக.,வுக்கு இழப்புதான் ஏற்பட்டது.

தேமுதிக பாமக இரண்டுமே தொடர் தோல்விகளை சந்தித்ததால் அந்த கட்சியில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வந்தனர்! இந்நிலையில் தங்களது கட்சி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இரண்டு கட்சிகளின் எதிர்காலம் கருதி இரு கட்சிகளுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தன.

ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி முடிவால் சிலர் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர்!

கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிகவும் பாமகவும் உள்ளது! ஆனால் விஜயகாந்த்தின் பங்கு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக.,வுக்கு எந்த விதமாக மக்கள் பதிலளித்திருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெரிந்து விடும்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் தற்போது சாதகமாக இல்லை! 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு தர்மபுரி தொகுதி மட்டும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது! நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக., வுக்கு கள்ளக்குறிச்சி மட்டும் கிடைத்தாலே பெரிய விஷயம்; அதுவும் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன!

இவ்வாறு வரும் கருத்துக் கணிப்புகளும் பேச்சுகளும் இந்த இரு கட்சிகளின் தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! ஏற்கனவே தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அடுத்த தாவலுக்குத் தயாராக  உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன!

தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் பாதகமாக முடிவுகள் அமைந்தால், இரு கட்சிகளின் எதிர்காலமும் தேய்பிறையாகப் போகும் வாய்ப்பு அதிகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories