December 6, 2025, 9:18 AM
26.8 C
Chennai

கட்டணம் கட்ட வழியின்றி குடும்பமே தற்கொலை! தனியார் பள்ளிகளே இனி வேண்டாம்! போராடுவோமா!?

suicidaldeath - 2025

பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாவது படிக்கும் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த இயலாததால் மாணவனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நாகை வெளிபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35 வயதாகும் இவர் நகைக் கடை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களது ஒரே மகன் ஜெகதீஷ் (10 வயது) நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்

குறைந்த வருவாய் என்பதால் ஏற்கெனவே பல இடங்களில் கடன் வாங்கி மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் செலுத்தியுள்ளார்! ஆனால் இந்த வருடம் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் கிடைக்காமல் மன வேதனையில் இருந்துள்ளார் செந்தில்குமார்!

பள்ளி திறந்து பத்து நாட்கள் ஆகியும் கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளது! இதனால் நாள்தோறும் வீட்டுக்கு சென்றதும் பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரிடம் ஜெகதீஷ் அழுதுள்ளான்.

படித்து போலீசாக ஆசைப்பட்ட தன் மகனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் இருக்கிறதே என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் புலம்பியுள்ளார் லட்சுமி!

இந்நிலையில் தன் மகனுக்கு போலீஸ் உடை அணிவித்து நேற்று மதியம் அழகு பார்த்த அந்தத் தம்பதி எலி மருந்தைக் கரைத்து குடித்து மகனுக்கும் கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்!

மதியம் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நகைக் கடைக்கு வேலைக்கு திரும்பாததால் கடை உரிமையாளர், கடையில் வேலைபார்க்கும் ஒருவரை செந்தில் குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தனியார் பள்ளியில் பிடுங்கும் கட்டணக் கொள்ளையால், தங்கள் மகனின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வழியின்றி ஒரு குடும்பமே தற்கொலையில் ஈடுபட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது!

நீட் தேர்வு எழுத இயலாமல் மதிப்பெண் பெற வழியின்றி ஓரிருவர் உயிரிழந்ததை அடுத்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த வழியின்றி ஏழை ஒருவர் தனியார் பள்ளியின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதால் தனியார் பள்ளிகளே வேண்டாம்; தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடுங்கள் என்று குரல் கொடுத்து போராட்டம் நடத்துவரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories