கட்டணம் கட்ட வழியின்றி குடும்பமே தற்கொலை! தனியார் பள்ளிகளே இனி வேண்டாம்! போராடுவோமா!?

suicidaldeath - 2026

பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாவது படிக்கும் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த இயலாததால் மாணவனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நாகை வெளிபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35 வயதாகும் இவர் நகைக் கடை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களது ஒரே மகன் ஜெகதீஷ் (10 வயது) நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்

குறைந்த வருவாய் என்பதால் ஏற்கெனவே பல இடங்களில் கடன் வாங்கி மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் செலுத்தியுள்ளார்! ஆனால் இந்த வருடம் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் கிடைக்காமல் மன வேதனையில் இருந்துள்ளார் செந்தில்குமார்!

பள்ளி திறந்து பத்து நாட்கள் ஆகியும் கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளது! இதனால் நாள்தோறும் வீட்டுக்கு சென்றதும் பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரிடம் ஜெகதீஷ் அழுதுள்ளான்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

படித்து போலீசாக ஆசைப்பட்ட தன் மகனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் இருக்கிறதே என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் புலம்பியுள்ளார் லட்சுமி!

இந்நிலையில் தன் மகனுக்கு போலீஸ் உடை அணிவித்து நேற்று மதியம் அழகு பார்த்த அந்தத் தம்பதி எலி மருந்தைக் கரைத்து குடித்து மகனுக்கும் கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்!

மதியம் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நகைக் கடைக்கு வேலைக்கு திரும்பாததால் கடை உரிமையாளர், கடையில் வேலைபார்க்கும் ஒருவரை செந்தில் குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தனியார் பள்ளியில் பிடுங்கும் கட்டணக் கொள்ளையால், தங்கள் மகனின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வழியின்றி ஒரு குடும்பமே தற்கொலையில் ஈடுபட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது!

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

நீட் தேர்வு எழுத இயலாமல் மதிப்பெண் பெற வழியின்றி ஓரிருவர் உயிரிழந்ததை அடுத்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த வழியின்றி ஏழை ஒருவர் தனியார் பள்ளியின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதால் தனியார் பள்ளிகளே வேண்டாம்; தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடுங்கள் என்று குரல் கொடுத்து போராட்டம் நடத்துவரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories