கட்டணம் கட்ட வழியின்றி குடும்பமே தற்கொலை! தனியார் பள்ளிகளே இனி வேண்டாம்! போராடுவோமா!?

suicidaldeath - 2026

பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாவது படிக்கும் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த இயலாததால் மாணவனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நாகை வெளிபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35 வயதாகும் இவர் நகைக் கடை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களது ஒரே மகன் ஜெகதீஷ் (10 வயது) நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்

குறைந்த வருவாய் என்பதால் ஏற்கெனவே பல இடங்களில் கடன் வாங்கி மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் செலுத்தியுள்ளார்! ஆனால் இந்த வருடம் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் கிடைக்காமல் மன வேதனையில் இருந்துள்ளார் செந்தில்குமார்!

பள்ளி திறந்து பத்து நாட்கள் ஆகியும் கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளது! இதனால் நாள்தோறும் வீட்டுக்கு சென்றதும் பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரிடம் ஜெகதீஷ் அழுதுள்ளான்.

படித்து போலீசாக ஆசைப்பட்ட தன் மகனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் இருக்கிறதே என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் புலம்பியுள்ளார் லட்சுமி!

இந்நிலையில் தன் மகனுக்கு போலீஸ் உடை அணிவித்து நேற்று மதியம் அழகு பார்த்த அந்தத் தம்பதி எலி மருந்தைக் கரைத்து குடித்து மகனுக்கும் கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்!

மதியம் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நகைக் கடைக்கு வேலைக்கு திரும்பாததால் கடை உரிமையாளர், கடையில் வேலைபார்க்கும் ஒருவரை செந்தில் குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தனியார் பள்ளியில் பிடுங்கும் கட்டணக் கொள்ளையால், தங்கள் மகனின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வழியின்றி ஒரு குடும்பமே தற்கொலையில் ஈடுபட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது!

நீட் தேர்வு எழுத இயலாமல் மதிப்பெண் பெற வழியின்றி ஓரிருவர் உயிரிழந்ததை அடுத்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த வழியின்றி ஏழை ஒருவர் தனியார் பள்ளியின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதால் தனியார் பள்ளிகளே வேண்டாம்; தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடுங்கள் என்று குரல் கொடுத்து போராட்டம் நடத்துவரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories