இந்திய -நியுஸி.,. மோதும் போட்டி! மழையால் ரத்தாகும் வாய்ப்பு?!

cricket ground rain - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய 18 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் படும் இந்தப் போட்டி, நாட்டிங்ஹாம் நகரில் நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாமில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும்,  இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களை எதிர்பார்ப்பை இரு அணிகளும் நிறைவேற்றும் முன், மழை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் 2019 இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கே மழை பெய்து வருவதால் பல ஆட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.

கடைசி 7 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. நாட்டிங்ஹாமில் உள்ள டிரன்ட்பிரிட்ஜில் இன்று நடைபெறவிருக்கும் இந்தியா, நியூசிலாந்து  மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், நாட்டிங்ஹாமில் நிலவும் வானிலை, கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

ஏற்கெனவே மழையால் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும், லீக் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால், மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டிங்ஹாமில் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.  இந்திய அணியில் காயம் காரணமாக விலகியுள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் எனத் தெரிகிறது. அதுபோல் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுலும் களம் இறங்குவர் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories