December 6, 2025, 4:58 AM
24.9 C
Chennai

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும்   ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….!

GH BED 2 - 2025

தமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ரூ.5 லட்சம் செலவில் 50 கட்டில்கள் முதல்கட்டமாக வாங்கப்பட்டுள்ளன.

மேலும் 150 கட்டில்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கே சில நேரங்களில் படுக்கை இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை உள்ளது.

இந்தச் சூழலில், அதற்கு நேர்மாறாக ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கும் பிரத்யேக கட்டில்கள் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்டில்களில் சில நவீன வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதை இரவு நேரங்களில் படுக்கையாகப் பயன்படுத்தி உறங்கலாம் என்றும், பகலில் அதனை மடக்கி நாற்காலியாக உபயோகப்படுத்தலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். அதேபோன்று 300-க்கும் அதிகமான உள்நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இதயநோய், ரத்த நாள பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே பெரும்பாலும் அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு உள்நோயாளிக்கும் உடனிருந்து கவனிக்க, அவரைச் சார்ந்த ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு துணையாக வரும் நபர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய வசதி செய்து தரப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் தரையிலும், நாற்காலிகளிலுமே உறங்க வேண்டிய நிலை உள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தரை முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் கீழே படுத்தால் அதிக குளிர் ஏற்படும். அந்த அசெளகரியங்களை எதிர்கொண்ட பலர், இதுகுறித்து எங்களிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர்.

அதை மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்தின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்று அதற்கு ஒப்புதல் வாங்கினோம். இதையடுத்து, ரூ.15 லட்சம் செலவில் கட்டில்களை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக 50 கட்டில்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது உள் நோயாளிகள் உடன் தங்கியிருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றார் அவர்.

இதனிடையே, இதுபோன்ற சேவைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியம். அப்போதுதான் அரசு மருத்துவனைகள் மீதான நம்பகத்தன்மையும், நற்பெயரும் மேம்படும்.

அதேவேளையில், அந்த வசதிகளை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு மக்களிடத்தில் உள்ளது.

ஏனெனில், பொது மருத்துவமனைகளுக்கு வரும் சிலர், அந்த வளாகத்தின் சுகாதாரம் சீர்கெடும் வகையிலேயே செயல்படுகின்றனர்.

அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தாமல் பயன்படுத்துவதற்கோ முன்வருவதில்லை.
எனவே, அரசு செய்து தரும் வசதிகளை பொறுப்புணர்வோடு பயன்படுத்தி மருத்துவமனை சுத்தமாக, வைத்துக் கொள்வதில் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் பங்குண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories