முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?

KERALA BUS 2 - 2026

பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.

இது பொதுமக்கள் மற்றும் சக பயணிகளிடையே அச்சத்தையும், அருவெருப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில்

இதனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல.

இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடங்கியவுடன் கல்லூரிகள் திறந்ததும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள்.

ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் சென்று கொண்டிருந்த பேருந்தைச் சிறைப்பிடித்தனர்.

பின்னர், பேருந்து மேற்கூரையின் மீது ஏறிக் கோஷமிட்டவாறு வந்து கொண்டிருந்தனர்.

பேருந்தின் முன்னாலும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட்டது.

இதனால், திடீரென்று டிரைவர் பிரேக் அடிக்க பஸ்சின் மேற் கூரையில் இருந்தவர்கள் சீட்டுக் கட்டு போலச் சரிந்து கீழே விழுந்தனர்.

ஒருவர் மேல் ஒருவர் விழுந்து `அய்யோ அம்மா’ன்னு கதறியபடி ஓடினர். மக்களுக்குத் தொல்லை தரும் மாணவர்கள் விழுந்து அடிபட்டதற்காக பொதுமக்களோ, சகபயணிகளே யாரும் வருத்தப்படவில்லை.

மாறாக, இவர்களுக்கு இது காணாது இன்னும் நன்றாக வேண்டும்' ,காயமடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது’ பெற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்காதவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மாணவர்களைத் திட்டி வந்தனா்.

வருடம் முழுவதும் தங்களை கல்லூரிக்குச் சுமந்து செல்லும் பேருந்துக்கும் அதன் ஓட்டுநர், நடத்துநருக்கு நன்றி சொல்வதுதானே பஸ்டே என்பதாகும்.

.ஆனால் என்றைக்காவது நம் மாணவர்கள் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் நன்றி தெரிவித்திருப்பார்களா? மாறாகத் தினம் தினம் அவர்களிடத்தில் சண்டை போட்டுக்கொண்டுதான் செல்வார்கள்.

பஸ் டே என்ற பெயரில் பேருந்தையும் சேதப்படுத்துகின்றனர். ஆனால், கேரளத்தில் பஸ் டே கொண்டாடப்படும் தினத்தில் தாங்கள் பயணிக்கும் பேருந்தை சுத்தமாகக் கழுவும் பணியினை மாணவர்களே மேற்கொள்கின்றனர்.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மானசிகமாக நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

நம் மாணவர்களிடத்திலும் இது போன்ற மாற்றம் எப்போது வருமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories