முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?

KERALA BUS 2 - 2026

பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.

இது பொதுமக்கள் மற்றும் சக பயணிகளிடையே அச்சத்தையும், அருவெருப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில்

இதனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல.

இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடங்கியவுடன் கல்லூரிகள் திறந்ததும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள்.

ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் சென்று கொண்டிருந்த பேருந்தைச் சிறைப்பிடித்தனர்.

பின்னர், பேருந்து மேற்கூரையின் மீது ஏறிக் கோஷமிட்டவாறு வந்து கொண்டிருந்தனர்.

பேருந்தின் முன்னாலும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட்டது.

இதனால், திடீரென்று டிரைவர் பிரேக் அடிக்க பஸ்சின் மேற் கூரையில் இருந்தவர்கள் சீட்டுக் கட்டு போலச் சரிந்து கீழே விழுந்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

ஒருவர் மேல் ஒருவர் விழுந்து `அய்யோ அம்மா’ன்னு கதறியபடி ஓடினர். மக்களுக்குத் தொல்லை தரும் மாணவர்கள் விழுந்து அடிபட்டதற்காக பொதுமக்களோ, சகபயணிகளே யாரும் வருத்தப்படவில்லை.

மாறாக, இவர்களுக்கு இது காணாது இன்னும் நன்றாக வேண்டும்' ,காயமடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது’ பெற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்காதவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மாணவர்களைத் திட்டி வந்தனா்.

வருடம் முழுவதும் தங்களை கல்லூரிக்குச் சுமந்து செல்லும் பேருந்துக்கும் அதன் ஓட்டுநர், நடத்துநருக்கு நன்றி சொல்வதுதானே பஸ்டே என்பதாகும்.

.ஆனால் என்றைக்காவது நம் மாணவர்கள் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் நன்றி தெரிவித்திருப்பார்களா? மாறாகத் தினம் தினம் அவர்களிடத்தில் சண்டை போட்டுக்கொண்டுதான் செல்வார்கள்.

பஸ் டே என்ற பெயரில் பேருந்தையும் சேதப்படுத்துகின்றனர். ஆனால், கேரளத்தில் பஸ் டே கொண்டாடப்படும் தினத்தில் தாங்கள் பயணிக்கும் பேருந்தை சுத்தமாகக் கழுவும் பணியினை மாணவர்களே மேற்கொள்கின்றனர்.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மானசிகமாக நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

நம் மாணவர்களிடத்திலும் இது போன்ற மாற்றம் எப்போது வருமோ?

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories