கரூர் கலெக்டர் மீது காங்கிரஸ் எம்.பி. புகாரால் பரபரப்பு…..!

jothimani - 2026
எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார் என்று கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார் கூறினார்.

கரூரில் எம்.பி.ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினையால் தவித்து வருகிறது.

நீண்ட நாட்களாக குடிநீர் சம்பந்தமான ஆக்கபூர்வமான பணிகளை சரிவர மேற்கொள்ளாததே இதற்கான காரணம் ஆகும்.

கரூரில் குடிநீர்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. இது பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்காக தான் தெரிகிறது.

மேலும் தொகுதிகளிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

water bump 1 - 2026

தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையொட்டி எனது செல்போன் நம்பரை, கலெக்டர் “கால் பிளாக்” செய்துள்ளார்.

நான் பாராளுமன்ற உறுப்பினரானதும் அதனை எடுத்து விட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கால் பிளாக்கில் வைத்துள்ளார்.

இப்படி இருந்தால் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை எப்படி முன் வைப்பது? எனவே இனியாவது இதனை மாற்றி கொள்ள வேண்டும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

தமிழகத்திலுள்ள தீவிரமான குடிநீர் பிரச்சினையை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதற்கான தனி நிதியை மத்திய அரசானது மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

காவிரி பிரச்சினையிலும் உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். தண்ணீர் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை.

இது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற கடமை பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, ‘எம்.பி. ஜோதிமணியின் செல்போன் எண்ணை பிளாக் செய்யவில்லை’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories