சுகாதாரமற்ற குடிநீர் விற்றால் கடும் நடவடிக்கை பாயும் அதிகாரிகள் எச்சரிக்கை….!

water bump 1 - 2026தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

இந்நிலையில் சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் பொதுமக்கள் தினந்தோறும் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள். கல்குவாரி நீர் மட்டுமே தற்போது கை கொடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீா் கேன்கள் விற்பனை மூலம் நாள்தோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனை ஆகின்றன.

இதில் 25 சதவீதம் சுகாதாரமற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து, பொதுமக்கள் 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

water can - 2026

இந்த குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தற்போது சுகாதாரமற்ற தண்ணீர் கேன் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

கோடை வெயில் குறையாத நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தண்ணீர் கேனையே அதிக அளவில் நம்பி உள்ளனர்.

இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை தண்ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.

இந்த நிலையில் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் குழாய்களிலும், நேரடியாக லாரிகளிலும் தண்ணீரை பிடித்து வடிகட்டி கேன்களில் அடைத்து சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தரமற்ற குடிநீர் கேன்களை சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறோம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ. லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டு உள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக எந்த நிறுவனத்தின் தண்ணீர், கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும். 20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இதேபோல் தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து, பொதுமக்கள் 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

புகார் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான குடிநீர் நிறுவனங்கள் குறித்தும் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories