விமான நிலைய சோதனையில் ‘நான் மனிதவெடிகுண்டு என மிரட்டல் விட்ட மா்ம மனிதா் கைதால் பரபரப்பு….!

AGULPADAL 5 - 2026

மும்பை விமான நிலையத்தில் நடந்த வழக்கமான பயணிகள் சோதனையின்போது பொறுமை இழந்து, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று சத்தம்போட்ட பயணியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்பையில் உள்ள டிராவல் கம்பெனி ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வருபவர் அகுல் பட்டேல் (36).

சம்பவத்தன்று தொழில்நிமித்தமாக விமானத்தில் நார்வே செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார். .

விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அகுல் பட்டேலும் சோதனையிடப்பட்டார். அப்போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

. திடீரென, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று அகுல் பட்டேல் சத்தம் போட்டதாக தெரிகிறது.

இதைக் கேட்டு அதிகாரிகள் மட்டுமின்றி வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் பின்னர் அகுல் பட்டேலை கண்டித்ததுடன் அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.

இதற்கிடையே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேலதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அகுல் பட்டேல் விமானத்தில் ஏறுவதை தடுத்து நிறுத்தி அவருடைய டிக்கெட்டை ரத்து செய்ததுடன் சகார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அகுல் பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் (மேற்கு மண்டலம்) டாக்டர் மனோஜ் குமார் சர்மா கூறினார்.

அகுல் பட்டேல் அந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நார்வேயில் இருந்திருப்பார். ஆனால் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories