December 6, 2025, 9:24 PM
25.6 C
Chennai

விமான நிலைய சோதனையில் ‘நான் மனிதவெடிகுண்டு என மிரட்டல் விட்ட மா்ம மனிதா் கைதால் பரபரப்பு….!

AGULPADAL 5 - 2025

மும்பை விமான நிலையத்தில் நடந்த வழக்கமான பயணிகள் சோதனையின்போது பொறுமை இழந்து, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று சத்தம்போட்ட பயணியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்பையில் உள்ள டிராவல் கம்பெனி ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வருபவர் அகுல் பட்டேல் (36).

சம்பவத்தன்று தொழில்நிமித்தமாக விமானத்தில் நார்வே செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார். .

விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அகுல் பட்டேலும் சோதனையிடப்பட்டார். அப்போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

. திடீரென, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று அகுல் பட்டேல் சத்தம் போட்டதாக தெரிகிறது.

இதைக் கேட்டு அதிகாரிகள் மட்டுமின்றி வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் பின்னர் அகுல் பட்டேலை கண்டித்ததுடன் அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.

இதற்கிடையே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேலதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அகுல் பட்டேல் விமானத்தில் ஏறுவதை தடுத்து நிறுத்தி அவருடைய டிக்கெட்டை ரத்து செய்ததுடன் சகார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அகுல் பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் (மேற்கு மண்டலம்) டாக்டர் மனோஜ் குமார் சர்மா கூறினார்.

அகுல் பட்டேல் அந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நார்வேயில் இருந்திருப்பார். ஆனால் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories