spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?நாலரை நடிப்புக்கு முட்டுக் கொடுத்த ஏழரை எழுத்து..!

நாலரை நடிப்புக்கு முட்டுக் கொடுத்த ஏழரை எழுத்து..!

- Advertisement -

மோடி அரசை எதிர்ப்பதாகவும், மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் வைப்பதாகவும் கருதிக்கொண்டு, இந்தியா, இந்தியர், இந்திய அரசு, இந்திய விழுமியங்கள், கலாச்சார, பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இழிவுபடுத்துவதாகவோ அல்லது மட்டம் தட்டுவதாகவோ, நச்சுக் கருத்துக்களை எழுதுவதையே பழக்கமாக கொண்டுள்ள சமஸ் என்ற ஒரு அர்பன் நக்சல் 4 1/2 அடிக்கு முட்டுக்கொடுத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது.

கட்டுரையின் தலைப்பே அநியாயமாக உள்ளது.
நீங்களும் பாருங்க, அந்த தலைப்பு-

“சூர்யாவின் அகரத்திடம் இந்திய கல்வித்துறை கற்கவேண்டிய பாடம்”

ராஜபாட்டையில் பவனி வருகிற பட்டத்து யானையை பார்த்து குரைக்கிற தெருவோர சொறிநாய் தான் ஞாபகம் வருகிறது, இந்த தலைப்பை பார்த்தால்.

ஒரு ஒண்ணரையணா பெறாத, பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியாத, பொதுமேடையில என்ன வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தற்குறி நடத்தும், எப்படி திடீர் என்று பலவழிகளிலிருந்தும் பணம் வருகிறது என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாத சேவை நிறுவனத்திடமிருந்து இந்திய அரசின் கல்வித்துறை கற்றுக் கொள்ளவேண்டுமாம்?

இந்த தலைப்பே சொல்லிவிடும், சமஸ் எப்படிப்பட்டவர் என்றும், யாருக்கு கழுவி விட்டுக் கொண்டிருக்கிறார் என்றும். இந்த பிழைப்புக்கு…., ஏதாவது சொல்லி விடப் போகிறேன்.

இந்த அகரம் என்ற “சேவை” நிறுவனத்தை ஆரம்பித்தது 4 1/2 அடி. ஆனால், அதற்கு கருத்துருவாக்கம் கொடுத்தது ஞானவேல் என்கிற “புரட்சி” எழுத்தாளர்.

இதன் நடவடிக்கைகள், செயல்பாடுகளை கவனிப்பது, “புரட்சி கல்வியாளர்” கல்யாணி, தினசரி மேலாண்மை ஜெயஸ்ரீயின் கட்டுப்பாட்டில்.

இதல்லாது, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளனர்.
இந்த லட்சணத்தை பார்த்தாலே, தெரியுது இது எந்த பணம், எந்த நாடுகளின், விருப்பத்துக்கு ஏற்ப நடனமாடும் அமைப்பு என்று.

அதற்கடுத்து, இவன் கல்விமுறையை குறை சொல்வான், இவன் பொண்டாட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களை குறை சொல்வாள்.

இதெல்லாம், தனித்தனி சம்பவங்கள் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, இந்திய அரசு, அரசு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு வெறுப்பை வரவழைக்கும் பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்றும் ஒவ்வொரு கிளைகள். ஏண்டா இப்படி அநாகரீகமா நடந்துக்கிறே, பொறுப்பில்லாமே உன் பொண்டாட்டி ஆசிரியர்களை இழிவுபடுத்துறா, உன் அப்பன் அநாகரிகமான பேசுறான், நடந்துக்கறான் என்றால், அதற்கான எதிர்வினையாக பாருங்க, எந்த எந்த மூலையில இருந்து எல்லாம் முட்டு கொடுக்க வர்றாங்கன்னு.

தனது குட்டு வெளிப்பட்டவுடன், இதெல்லாம், தனிப்பட்ட குடிமகனின் கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்ன்னு சொல்வான்.
அப்புறம் சினிமாவுல ஏன் நச்சு கருத்துக்களை பரப்புறேன்னு கேட்டால் சினிமாவை சினிமாவா பாருங்கன்னு சொல்வான். அப்பறம் என்ன கேசத்துக்கு கருத்துக் கூந்தலை அள்ளி முடியிறீங்க?

4 1/2 அடி, செல்தட்டி பேமிலி?

எப்படி, இத்தனை பிளாப் படங்கள் கொடுத்தாலும், நூற்றுக் கணக்கிலான கோடி பணம் கொட்டி பங்களா, சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது என்று எந்த உண்மையையும் மறைக்காமல் சொல்ல கற்றுக்கொள்ளச் சொல்லவும். எதுவும் முடியலேனா, நவ துவாரத்தையும் மூடிக்கிட்டு, ஒழுங்கா நடிக்க முயற்சிக்கவும்.

இதுக்கெல்லாம், சமசுக்கும் துப்பிருக்காது, 4 1/2 அடிக்கும் நேர்மையிருக்காது, இந்த குப்பையெல்லாம் சிறப்பு கட்டுரையாக பதிப்பிக்கிற மவுண்ட் ரோடு மாவோவுக்கும் கொஞ்சமேனும் லவலேசம் இருக்காது.

– மு.ராம்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe