மெசேஜ் மட்டும் அல்ல… வாட்ஸ் அப்பில் பணத்தையும் பரிமாறலாம்!

Whatsapp - 2026

மெசேஜ்கள் படங்கள் வீடியோக்கள் மட்டுமல்ல இனிவா வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாறலாம் .

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்கவுள்ளது.

இதனை வியாழக்கிழமையன்று, உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) அறிவித்தார்.

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த பரிவர்த்தனை சேவையின் சோதனை ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது . தற்போது இந்த சேவை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

“இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் இந்த சேவையைத் (பணப் பரிவர்த்தனை) தொடங்கலாம்” என்று ஒரு நிகழ்வில் கேத்கார்ட் கூறினார்.

இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் சுமார் பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்து வார்கள் என கூறியுள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.

காந்த் மேலும் பேசுகையில் “அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பூர்த்தி செய்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே-யை (WhatsApp Pay) எதிர்பார்க்கலாம்” எனக் கூறினார்.

பேஸ்புக்த தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் பே-யை இந்தியாவில் தொடங்க இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.

இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது (பேஸ்புக் நாட்டில் மேலும் 300 மில்லியனைக் கொண்டுள்ளது). வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால், பேடிஎமின் 230  மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும்.

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதி முறைகளை பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories