வெட்டிய கை ஒட்டுமா ? கையை வெட்டியவர் காவல்துறையில் கையுடன் சரண் !

sujatha - 2026கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள சிறுமுகை சாலைப் பகுதியில் வசிப்பவர் ஆர்.தங்கராஜ் என்பவர். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவரான சுஜாதா தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவில் பணிபுரிகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சுஜாதா, தங்கராஜை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த தங்கராஜ், அரிவாளால் சுஜாதாவின் இடது கையை மணிக்கட்டு பகுதியுடன் சேர்த்து வெட்டி எடுத்துக் கொண்டு, தப்பியோடி விட்டார்.

சுஜாதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தினர். இதுபற்றி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அடுத்த சில மணிநேரத்திற்குள், தங்கராஜ் வெட்டப்பட்ட கையுடன் காவல்துறையில் நேரடியாக சரணடைந்தார்.

வெட்டப்பட்டு சில மணிநேரங்களுக்கு கைகளின் திசுக்கள் உயிரிழக்காமல் இருக்கும். அதற்குள் வெட்டுப்பட்ட பகுதி கிடைத்தால் அதனை ஏற்கனவே இருந்த இடத்தில் பொருத்தி செயல்பட வைக்க முடியும்.

அந்த கையை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை,உடனடியாக சுஜாதாவிற்கு, சிகிச்சை செய்து அந்த கையை ஒட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். மருத்துவர்களும் இதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories