தண்ணீரில் தத்தளித்து கரைசேர்ந்த பெண் சடலம் ! கண்ணீரில் நனைக்கும் காட்சி படலம் !

niliammal - 2026சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

வேறு மார்க்கம்  ஊரின் மறுபுறத்தில் ஓடும் மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். மாயாறு சாதாரண நாட்களில்  பரிசலில் கடந்து செல்லலாம். ஆனால், தற்போது கனமழையின் காரணமாக  காட்டாற்று வெள்ளம்  கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், மாயாற்றில் பரிசல் பயணம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் அங்குள்ள அள்ளிமாயார் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் முயற்சியாக ஆம்புலன்ஸ் வழியாக சடலத்தை கல்லம்பாளையம் வரை கொண்டு வந்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அடுத்தாக  வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மாயாற்றை எப்படி கடப்பது என குழம்பிய நிலையில், வெகு நேர ஆலோசனையின் பின் நீலியம்மாளின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி மாயாற்றில் 3, 4 பேர் பிடித்துக் கொண்டு, நீச்சலடித்தபடியே எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நவீனமயமாகி விட்ட காலகட்டத்திலும்,தொழில்நுட்ப வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பெருகிவிட்ட இந்நிலையிலும் மரக்கட்டையில் சடலத்தை கட்டி, மலைவாழ் மக்கள்  எடுத்துச் சென்ற சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

எங்களுக்கு ஒரு பாலம் வேண்டும் என்று ரொம்ப காலமாகவே இந்த மக்கள் கேட்டு கொண்டு வருகின்றனர். அதில் இறந்துபோன நீலியம்மாளும் ஒருவர். குறிப்பிட்ட மலைவாழ் கிராமத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories