சுபாஷிதம்: வீழ்ச்சிக்கான காரணங்கள்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

18. வீழ்ச்சிக்கு காரணங்கள்!

செய்யுள்:

ஆலஸ்யோபஹதா வித்யா பரஹஸ்த கதம் தனம் !
அல்பபீஜ ஹதம் க்ஷேத்ரம் ஹதம் ஸைன்யமநாயகம் !!

— சாணக்கிய நீதி -5.7

பொருள்: சோம்பலால் கல்வி அழிகிறது. பிறர் கையில் சேர்வதால் செல்வம் அழிகிறது. விதை சரியின்றி பயிர் அழிகிறது. சரியான தலைவன் இல்லாததால் படை அழிகிறது.

விளக்கம்: கல்வி, செல்வம், பயிர், படை இவற்றைப் பாதுகாப்பதற்கு தேவையான முயற்சி செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கும் சுலோகம் இது.

‘ஆலஸஸ்ய குதோ வித்யா’ – சோம்பேறிக்கு கல்வியறிவு பிடிபடாது. அதனால் சோம்பலை விட்டுவிட்டு கல்வி அறிவைப் பெற வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி தேவை. பிறரிடம் சென்று விடாமல் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். நல்ல விதையால் நல்ல பயிர் விளையும். விளைநிலத்தை குறை கூறக்கூடாது. போலி விதைகள் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாகின்றன.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதேபோல் எந்த நிறுவனமானாலும், படையானாலும் சரியான தலைவன் இருந்தால்தான் வெற்றி கிட்டும். தலைவன் இல்லாத படை தைரியத்தை இழந்து தோல்வி அடைந்த வரலாறுகள் உள்ளன.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இறுதி அரசர் ராமராயரை எதிரிகள் மிகக் கொடூரமாக தலையை வெட்டி சூலத்தில் குத்தி காட்சிக்கு வைத்த பயங்கரமான சம்பவத்தை பார்த்த ராயரின் படை சிதறி ஓடியது. போர்க்களத்தை விட்டோடி எதிரிகளின் வெற்றிக்கு காரணமானது.

இப்ரஹிம் லோடி லட்சக்கணக்கான படை வீரர்கள் இருந்தும் முதலாம் பானிபட் யுத்தத்தில் பத்தாயிரம் படை வீரர்கள் கூட இல்லாத பாபரின் கைகளில் தோற்றான். வரலாற்றில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் சிறந்த தலைவனின் அவசியத்தைக் கூறுகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img