சுபாஷிதம்: அழுமூஞ்சிகள்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

25. அழுமூஞ்சிகள்!

செய்யுள்:

ஈர்ஷ்யீ க்ருணீ த்வசந்துஷ்ட: க்ரோதனோ நித்ய சங்கித: |
பரபோக்யோபஜீவீ ச ஷடேதே நித்ய து:கிதா: ||

மகாபாரதம்

பொருள்:

எப்போதும் துயரத்தில் இருக்கும் அழுமூஞ்சிகள் ஆறு பேர் என்று இந்த சுபாஷிதம் கணக்கிடுகிறது. பொறாமை கொண்டவர், அதிகமாக இரக்கப்படுபவர் அல்லது அதிகமாக வெறுப்பவர், திருப்தியற்றவர், முன்கோபி, சந்தேகப் பிராணி,  பிறரை அண்டிப் பிழைப்பவர்.

விளக்கம்:

திருதிராஷ்டிரனுக்கு விதுரர் கூறிய பல நல்ல அறிவுரைகளில் இந்த சுலோகமும் ஒன்று. எப்போதும் சோகத்தில் இருப்பவர்களின் பட்டியல் இங்கே கொடுக்கிறார்.

தீய குணங்களை விட்டு விலகினால்தான் மனித வாழ்க்கையில் சுகம் கிடைக்கும் என்று கூறுவதற்கு இங்கு அத்தகைய தீய குணங்களை ஓரிடத்தில் சேர்த்துக் காட்டுகிறார் மகரிஷி. இந்த துர்குணங்கள் அனைத்தும் இயல்பாகவே ஏற்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இவற்றை விட்டு விலகினால்தான் துயரம் நம்மை விட்டு நீங்கும். உன் துன்பத்திற்கு பிறர் யாரும் பொறுப்பல்ல என்ற உட்பொருள் இந்த செய்யுளில் உள்ளது. உன்னை நீயே உய்வித்துக்கொள் என்ற அறிவுரை கூட இதில் உள்ளது.

துன்பத்தை விலக்கிக் கொள்ளும் உபாயம் நம் கையில்தான் உள்ளது என்பதை அறியலாம். நான் நினைத்தால் துன்பத்திலிருந்து நீங்கி சுகப்பட முடியும் என்பதற்கு இது உதாரணம்.

மானுடனின் இச்சா சக்தியின் முன்னால் ப்ரக்ருதி கூட தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதே என்றார் சுவாமி விவேகானந்தர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img