February 20, 2026, 7:18 AM
24.5 C
Chennai

சுபாஷிதம்: கூச்சத்தை விட்டொழி!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

53. கூச்சத்தை விட்டொழி!

ஸ்லோகம்:

தனதான்ய ப்ரயோகேஷு வித்யா சங்க்ரஹணே௨பி ச |
ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத் ||

— சாணக்கிய நீதி

பொருள்:

பொருளாதார விஷயங்களிலும் கல்வி கற்பதிலும் உணவு விஷயத்திலும் மனித உறவுகள் தொடர்பான விஷயங்களிலும் வெட்கத்தைவிட்டவனே சுகப்படுவான்.

விளக்கம்:

உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நோ சொல்லக் கற்று கொள் என்று கூறுவர் மனோதத்துவ நிபுணர்கள். சங்கோஜப்பட்டு வருத்தத்துக்கு ஆளாகாதே என்பது அவர்களின் அறிவுரை.

சங்கோஜப்படுபவர்கள் பிறருக்கு கடன் கொடுத்தோ, சாட்சிக் கையெழுத்துப் போட்டோ நஷ்டம் அடைவார்கள் என்பது இதன் எச்சரிக்கை.  மன அமைதியைக்  குலைக்கும் சங்கோஜத்தாலோ பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்று கூச்சப்பட்டோ உனக்குப் பிடிக்காத செயலைச் செய்யாதே என்பது இந்த சுலோகத்தின் உபதேசம்.

சிலசமயம் தெரிந்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் வேறு வழியின்றி தலையிட்டு அவர்கள் தரப்பில் நின்று பேசுவோம். அவ்வாறு பேசுவது கூட நம் சுகத்தை விலக்கக் கூடியது என்பது சாணக்கியர் கூறும் நல்லுபதேசம். 

வெட்கம், நாணம், கூச்சம், சங்கோஜம் போன்றவற்றை சில இடங்களில் காட்டக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். 

வெட்கம் மனிதனுக்கு அலங்காரம் என்பார்கள். அலங்காரம் என்பது தேவையான போது அணிந்துகொண்டு தேவையற்றபோது எடுத்து வைத்து விடுவோம் அல்லவா? இந்த ஸ்லோகத்தில் கூச்சப்படக் கூடாத சில சந்தர்ப்பங்களை விவரிக்கிறார். வியாபார நிலையங்களிலும், தனம், தானியம் தொடர்பான விவகாரங்களிலும் கூச்சப்படக் கூடாது.

பணம் கொடுக்கல் வாங்கலில் எத்தகைய நண்பன் ஆனாலும் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்கும்போதும், வகுப்பில் பாடம் கேட்கும் போதும் ஏதாவது ஐயம் தோன்றினால் யார் என்ன நினைப்பார்களோ என்று தயங்கினால்  யாருக்கு நஷ்டம்? அதனால் படிப்பு விஷயத்திலும் கூச்சப்படக் கூடாது. அதே போல்  உணவு உண்ணும் போதும், பத்தியம் இருக்கும்போதும்  சங்கோஜப்பட்டால் வயிற்றுக்கு கேடு விளையும்.

இவ்விதம் வெட்கப்படக்கூடாத இடங்களில் சங்கோஜப் படாதவர்களே சுகமாக வாழ்வார்கள். மனசாந்தியோடு இருப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories